மதுரை, பிப்.1- ‘வாக்களிக்க பணம் பெற வேண்டாம்’ என்ற விழிப்புணர்வுக்காக சுயேச்சை வேட்பாளர் டம்மி பணத்துடன் வந்து வேட்புமனுத் தாக்கல் செய்தால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாநகராட்சி தேர்தலில் 24-வது வார்டில் சுயேட்சை வேட்பாளராக சமூக ஆர்வலர் சங்கரபாண்டியன் வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள வடக்கு மண் டல அலுவலகத்திற்கு வந்திருந்தார். அப்போது அவர் கையில் கட்டுக் கட்டான டம்மி பணத்துடனும், கையில் ‘ஓட்டுக்கு பணம் பெறக்கூடாது’ என்ற வாசகங்கள் குறிப்பிட்ட பதாகையுடன் வந்திருந்தார். அவரை காவல்துறையினர் பிடித்து டம்மி ரூபாய் நோட்டுக்களை பறிமுதல் செய்தனர். இதையடுத்து வேட்புமனுவை மட்டும் அவர் தாக்கல் செய்தார். வாக்காளர்கள் தேர்தல் நேரத்தில் பணத்தை பெற்றுகொண்டு வாக்களித்து விடுகின்றனர். அது தவறு என்பதை விழிப்புணர்வு செய்வதற்காக டம்மி பணத்தை கொண்டு வந்ததாக கூறினார்.