மதுரை, ஜன.31- பொதுச் சொத்துக்கள் தனியாருக்கு விற்கப்படுவதை நீதிமன்றம் பார்த்துக் கொண்டிருக்காது என்றும் மதுரை மேலூர்பகுதியில் 1.5 கோடி மதிப்பி லான கோவில் நிலத்தை போலியான ஆவணங்கள் தயாரித்து தனிநபருக்கு விற்பனை செய்த வழக்கை மீண்டும் விசாரணை நடத்தவு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டம் கவட்டையம்பட்டி யில் இளந்தகரை அய்யனார் கோவி லுக்குச்சொந்தமான 10.88 ஏக்கர் பொது நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் குறைவான விலைக்கு விற்பனை செய்ததாக தர்மலிங்கம், கருப்பணன், சந்திரன் உள்ளிட்ட 9 பேர் காவல்துறை யினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த மேலூர் நீதி மன்றம், சிவில் பிரச்சனை சார்ந்த வழக்கு எனக்கூறி அனைவரையும் விடுவித்தது. இதனை எதிர்த்த வழக்கில் மதுரை கூடு தல் அமர்வு நீதிமன்றமும் உறுதி செய்தது. இதை எதிர்த்து மேலூர் காவல் துறை துணை கண்காணிப்பாளர் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளை யில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
அதில், ரூ.1.5 கோடி மதிப்புள்ள கோவில் பொது நிலம் ரூ.1.57 லட்சத் திற்கு மட்டுமே விற்பனை செய்யப்பட்டு உள்ளது. இதைகீழமை நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை என கூறப்பட் டிருந்தது. இந்த மனுவை சனிக்கிழமை யன்று நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் விசா ரித்தார்.அப்போது அரசு தலைமை குற்ற வியல் வழக்கறிஞர் அசன் முகம்மது ஜின்னா ஆஜராகி, இயற்கை வளம் வருங்கால தலைமுறையின் சொத்தா கும். இதை அழிப்பதை ஏற்க முடியாது. இயற்கை வளத்தை சுரண்டுவோரை கடுமையாக தண்டிக்க வேண்டும். இந்த வழக்கில் பொதுமக்கள் பயன்பாட் டிற்கான இடத்தை போலியான ஆவ ணங்கள் தயார் செய்து தனி நபருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று வாதிட்டார். இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், நேர்மையற்ற முறையில் நிலம் மாற்றப்பட்டுள்ளது. முகாந்திரம் உள்ள குற்ற புகார்களை யார் வேண்டுமா னாலும் அளிக்கலாம். பொதுச் சொத்துக் கள் தனியாருக்கு மாற்றப்படுவதை கண்டு நீதிமன்றம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. வழக்கை முறையாக விசாரித்து, இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டியது காவல்துறையினரின் கடமை. இந்த மனு ஏற்கப்படு கிறது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 9 பேர் மீதும் விசாரணை நீதிமன்றத்தில் உரிய பிரிவுகளில் குற்றச்சாட்டு பதிவு செய்ய வேண்டும். வழக்கின் விசார ணையை விரைந்து நடத்தி முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.