மதுரை, ஏப். 5- மதுரையில் சமையல் எரிவாயு உருளைக்கு மாலை அணிவித்தும் ஒப்பாரி வைத்தும் மாதர் சங்கதினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடு முழுவதும் பெட்ரோல் - டீசல் விலை உயர்வை தொடர்ந்து சமையல் எரிவாயு விலையும் உயர்ந்து வருகிறது.
இதை ஒன்றிய பாஜக அரசு கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கதின் மேலப்பொன்னகரம் பகுதிக்குழுவினர் கரிமேடு மோதிலால் மெயின் ரோட்டில் சமையல் எரிவாயு உருளைக்கு மாலை அணிவித்தும், ஒப்பாரி வைத்தும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒன்றிய அரசை கண்டித்தும், சமையல் எரிவாயு விலை உயர்வால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர் எனவும், ஒன்றிய அரசு சமையல் எரிவாயு விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என கோசங்கள் எழுப்பினர்.
இந்த போராட்டத்திற்கு அப்பகுதி மாமன்ற உறுப்பினர் வை.ஜென்னியம்மாள் தலைமைவகித்தார். மாவட்டச் செயலாளர் ஆர்.சசிகலா மூத்த தோழர் அங்கயற்கண்ணி, மாவட்ட குழு உறுப்பினர் மல்லிகா மற்றும் பகுதி குழு நிர்வாகிகள் ஜெயா, அன்னம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.