தேனி, மார்ச் 3- கம்பத்தில் நடைபெற்ற அறிவியல் இயக்க நிகழ்வில் தமிழ்ச்செம்மல் விருது பெற்ற கம்பம் புதியவன் பாராட்டப்பட்டார். தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் கம்பம் சந்திப்பு நிகழ்ச்சி கம்பத்தில் நடைபெற்றது. நிகழ்விற்கு கிளைத் தலைவர் மா.சிவக் குமார் தலைமை வகித்தார். செயற்குழு உறுப்பினர் சங்கரேஸ்வரி வரவேற்றுப் பேசினார். மாநில செயற் குழு உறுப்பினர் தேனி சுந் தர் நிகழ்வை துவக்கி வைத்து பேசினார். மாவட்டச் செயலாளர் வெங்கட்ராமன் அறிமுகம் செய்து வைத் தார். நிகழ்வில் இஸ்ரோ விஞ்ஞானி சசிக்குமார் செய ற்கை நுண்ணறிவு குறித்து எழுதிய மனிதனா இயந்தி ரமா? வெல்லப் போவது யார்? என்கிற நூலும், கம் பம் புதியவன் என்கிற பேரா. செந்தில்குமார் எழுதிய ஒத்த வீடு சிறுகதைத் தொகுப்பு நூலும் அறிமுகம் செய்யப் பட்டன. தமிழ் வளர்ச்சித் துறை யின் சார்பில் தமிழ்ச் செம்மல் விருது அறிவிக்கப்பட்ட நூலாசிரியர் கம்பம் புதிய வனுக்கு பாராட்டு தெரிவிக் கப்பட்டது. கிளைப் பொரு ளாளர் கௌசல்யா நன்றி கூறினார்.