மதுரை, ஜூன் 17- இந்திய தொழில்நுட்பக் கழகம் - சென்னை (ஐஐடி- எம்) உடன் இணைந்து தமிழக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர், தமிழகத்திலிருந்து கள வாடப்பட்டு பல்வேறு சர்வதேச அருங்காட்சிய கங்களில் வைக்கப்பட்டுள்ள கோவில்களுக்குச் சொந்த மான பழங்கால சிலைகளை மீட்டு வருவதற்கு செயற் கை நுண்ணறிவு அடிப்ப டையிலான மென்பொருளை உருவாக்கி வருகிறது என காவல்துறை தலைமை இயக்குநர் கே.ஜெயந்த் முரளி கூறினார். வெள்ளிக்கிழமை செய்தி யாளர்களிடம் பேசிய அவர், சென்னை ஐஐடி நிறுவனம் தயாரிக்கும் மென்பொருள் மூலம் சர்வதேச அருங் காட்சியகங்கள், சிலை சேகரிப்பாளர்களின் இணைய தளங்களில் கிடைக் கும் படங்களைப் பயன் படுத்தி பாண்டிய, சோழர் மற்றும் சங்க காலத்தைச் சேர்ந்த சிலைகளை அடை யாளம் காண முடியும். மதுரையில் மரகத லிங்கம் காணாமல் போன புகாரின் பேரில், அதை மீட்பதற்கான விசாரணை நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் இருந்து பெரும் பாலான சிலைகள் அமெ ரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்தி ரேலியா ஆகிய நாடுகளுக்கு கடத்தப்பட்டுள்ளன. சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு குற்றப்பிரிவு காவல் துறையினர் தமிழகத்தை சேர்ந்த 40 சிலைகள் கடத்தப்பட்டு பல்வேறு நாடுக ளில் வைத்திருப்பதைக் கண்டறிந்துள்ளனர். இது தொடர்பான பரஸ்பர சட்ட ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ள நாடுக ளில் இந்த சிலைகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது என்றார். தொடர்ந்து தென்காசி மாவட்டம் ஆழ்வார் குறிச்சியில் உள்ள நரசிங்க நல்லூர் கோவில் செயல் அலுவலர் கண்ணதாசனிடம், சமீபத்தில் அமெரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்ட நந்திகேஸ்வரர் மற்றும் கங்க ளாமூர்த்தி ஆகிய இரு சிலைகளை ஜெயந்த் முரளி வழங்கினார்.