கும்பகோணம், பிப்.3- தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க 9 ஆம் ஆண்டு அமைப்பு தின கொடி யேற்று விழா கும்பகோணத்தில் உள்ள அனைத்து துறை ஓய்வூதியர் சங்க அலுவலகத் தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வட்ட தலைவர் துரைராஜ் தலைமை வகித்தார். மருந்தாளுநர் சங்க மாநில பொருளாளர் விஸ்வேஷ்வரன், பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பாக்கிய நாதன், கிராம பணியாளர்கள் ஓய்வூதியர் சங்க ராமதாஸ், ஓய்வூதியர் சங்க மாவட்ட துணை தலைவர் பழ.அன்புமணி, வட்ட செயலாளர் பக்கிரிசாமி, பொரு ளாளர் ராமமூர்த்தி மற்றும் ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர். வேதாரண்யம் நாகை மாவட்டம் வேதா ரண்யம் வருவாய்க் கோட்டாட்சி யர் அலுவலகம் முன்பு நடை பெற்ற கொடியேற்று விழாவிற்கு வட்டார தலைவர் ஆர்.குணசேக ரன் தலைமை வகித்தார். ஓய்வூதி யர் சங்க மாவட்ட தலைவர் என். நடராஜன் கொடியேற்றினார். இதில் ஓய்வு பெற்ற அலுவலர் கள் வேதரத்தினம், ராஜமாணிக் கம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.