வேப்பனப்பள்ளி, டிச. 16- கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகே உள்ள மணவாரனபள்ளி ஊராட்சியில் சின்ன முனியப்பன் கொட்டாய் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. கிராமத்திற்கு செல்ல கங்க மடுகு கிராமத்திலிருந்து குப்தா நதியை கடந்து செல்ல வேண்டும். தற்போது மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு ஆண்டாக ஆபத்தான நிலை யில் கிராம மக்கள் அனைவரும் குப்தா ஆற்றில் இறங்கி பயணம் செய்து வந்தனர். இந்நிலையில் தற்போது மீண்டும் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கிராமத்தை விட்டு வெளியே வர முடியாமல் கிராம மக்கள் தவித்து வருகின்றனர். இத னால் இரண்டு மாதங்களாக குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிலேயே உள்ளனர். மேலும் முதியவர்கள் முதல் கர்ப்பிணி பெண்கள் வரை மருத்துவ வசதி கூட இல்லாமல் அவதிப்பட்டு வரு கின்றனர். ரேசன் பொருட்கள் வாங்கக்கூட ஆற்றை கடந்து செல்ல வேண்டியுள்ளதால், ஆற்றை கடக்க அச்சப்பட்டு வீட்டிலேயே உள்ளனர். ஒரு சிலர் மட்டும் ஆபத்தான முறை யில் பாய்ந்து ஓடும் வெள்ளப் பெருக்கு ஆற்றில் ஊன்று கோளை வைத்துக் கொண்டு பயணம் செய்து வருகின்றனர். மேலும் இரண்டு மாதங்களாக பள்ளிக்கு செல்லாமல் இருக்கும் பள்ளி குழந்தைகளை ஆசிரியர்கள் வந்து கிராம மக்களிடம் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புமாறு வேண்டுகோள் வைத்தனர். இதையடுத்து பெற்றோர்கள் தனது குழந்தைகளை ஆற்றில் ஆபத்தான முறையில் தோளில் சுமந்து கொண்டு பள்ளிக்கு அனுப்பி வருகின்றனர். எனவே அரசு சிறப்பு நிதி ஒதுக்கி உடனடியாக மேம் பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ள னர்.