districts

img

திறந்த வெளி சத்துணவு கூடம்: கண்டுக்கொள்ளாத அதிகாரிகள்

கிருஷ்ணகிரி, மார்ச் 9- ஓசூர் அடுத்த உத்தனப் பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலை ஒட்டியுள்ள கருக்கம்பட்டியில் அரசு துவக்க பள்ளி உள்ளது. இங்கு 113 மாணவர்கள் படிக்கின்றனர். ஆனால் போதிய வகுப்பறைகள் இல்லாததால் மாணவர்கள் இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இங்குள்ள சமையல் கூடம் மிகச் சிறியதாக வும் மேற்கூரை காரை கள் உதிர்ந்து கம்பி கள் வெளியில் நீட்டிக் கொண்டும் உள்ளன. மழைச் காலங்களில் தண்ணீர் கசிந்து உள்ளே தேங்கி நிற்கிறது. சுவர்கள் அனைத்தும் விரிசலடைந்து கீழே விழும் நிலையில் உள்ளது. இதனால் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக திறந்த வெளியில் சாலை ஓரத்தில் சமைக்கப்படு கிறது.   இதுகுறித்து வரு வாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, ஊராட்சி ஒன்றிய அலுவலகம், கல்வித்துறை அதி காரிகளுக்கு பலமுறை புகார் தெரிவித்தும் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் கோப மடைந்த அப்பகுதி மக்கள் அங்கன்வாடிக்கு குழந்தைகளையும், பள்ளிக்கு மாணவர்களை யும் அனுப்பாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அரசு அதி காரிகள் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, போதிய வகுப்பறைகள் கட்டவும், அங்கன்வாடி மையம் அமைக்கவும் நட வடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்த னர். இதையடுத்து அனை வரும் கலைந்து சென்றனர்.