கிருஷ்ணகிரி, மார்ச் 15- கிருஷ்ணகிரி மாவட்டம் கொரட்டகிரி கிராமத்தில் உள்ள கல்குவாரிகளில் வெடி வைப்பதால் வீடுகளில் விரிசல் ஏற்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக் கோட்டை தாலுகா கொரட்டகிரி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் ஆட்சியர் அலு வலகத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில், கொரட்டகிரி கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இந்த கிராமத்தை சுற்றி சுமார் 5 கல் கிரஷர் குவாரிகள் இயங்கி வரு கிறது. இங்கு கல் உடைப்பதற்காக சக்தி வாய்ந்த போர் பிளாஸ்டிங் வெடி வைக்கப்படுகிறது. இதனால் அருகில் உள்ள எங்கள் கிராமத்தில் வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் அவ்வப்போது கல் அரவை செய்யப்படுவதால் அதில் இருந்து வெளி யேறும் தூசு விளை நிலங்களில் படர்ந்து விவசாயமும் பாதிக்கப்படுகிறது. இதனால் விவசாயத்தை நம்பியுள்ள மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், பயங்கர வெடி சத்தம், சிதறும் கற்களை எதிர் கொண்டு தான் குழந்தைகள் அந்த பகுதி சாலையை கடந்து பள்ளிக்கு செல்ல வேண்டியுள்ளதால், கடந்த 15 நாட்களாக குழந்தைகளை பெற்றோர்கள் பள்ளிக்கு அனுப்ப முடியாமல் தவித்து வருகின்றனர். இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நட வடிக்கையும் எடுக்கவில்லை. நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் கிராம மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பு, எங்களின் குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாளர் அட்டை உள்ளிட்டவற்றை சாலையில் வீசி போராட்டம் நடத்தப்போவதாக அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.