கிருஷ்ணகிரி, மார்ச் 15- சாலை விரிவாக்கம் என்கிற பெயரில் சாலையோரம் இருந்த புளிய மரங்கள் அகற்றப்பட்டதால் புளி உற்பத்தி பாதிப்பட்டுள்ளதாக கிருஷ்ண கிரி பகுதி விவசாயிகள் வேதனை கூறியுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தளி, அஞ்செட்டி, கெலமங்கலம், ஊடேதுர்கம், உள்ளுகுறுக்கி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. விவசாயத்திற்கு பயன்படாத தரிசு நிலங்களில் நீண்ட காலம் பலன் தரும் புளிய மரங்களை விவசாயிகள் நடவு செய்து பராமரித்து வருகின்றனர். இப்பகுதியில் விளையும் புளி நல்ல சதைபற்றும், நல்ல சுவை யானதாக இருக்கும் என்பதால், தமிழ்நாடு மட்டுமல்லாமல், வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்புகின்றனர். ஆண்டுதோறும் பிப்ரவரி முதல் ஜூன் வரை புளி மகசூல் அறுவடை செய்யப்படும். வியா பாரிகள் விவசாயிகளிடம் புளியம் பழங்களை மேலோடு களுடன் வாங்கி சென்று கூலி தொழிலாளிகளை கொண்டு ஓடு விதை களை நீக்கி சுத்தப்படுத்தி அதனை குளிர்பதன கிடங்கில் வைத்து நல்ல விலை கிடைக்கும்போது, விற்பனை செய்கின்றனர். நடப்பாண்டில் அதிக மழை பெய்ததால், புளியில் ஒரு வகையான நோய் தாக்கியதால் புளி வரத்து குறைந்துள்ளது. சாலையோரம் இருந்த புளிய மரங்களும் அகற்றியதால் தற்போது உற்பத்தி பாதிக்கப் பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.