districts

img

ஆற்று புறம்போக்கு ஆக்கிரமிப்பை எதிர்த்த சிபிஎம் தலைவர்கள் மீது தாக்குதல்

கிருஷ்ணகிரி, நவ. 17- கழிவு நீர் கால்வாய், ஆற்று புறம்போக்கு ஆக்கிரமிப்பை எதிர்த்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஓசூர் மாநகர செயலாளர் சி.பி.ஜெயராமன், மாவட்ட குழு உறுப்பினர் நாராயணமூர்த்தி ஆகி யோர் தாக்கப்பட்டனர். ஓசூர் நல்லூர் சாலையில் உள்ள சாமுண்டி நகரில் பசப்பா என்பவரின் மகன் விஸ்வநாத் வசிக்கிறார். அருகில் ஜங்கம்ம ரெட்டி மகன்கள் குருபிரசாத், ஸ்ரீதர் ஆகியோர் வசிக்கின்றனர். இந்நிலையில் விஸ்வநாத் வீட்டின் கழிவுநீர் வெளியே செல்லாதபடி, கால்வாயையும் அருகில் உள்ள ஆற்றுப் புறம்போக்கையும் ஜங்கம்மா ரெட்டியின் குடும்பத்தினர் ஆக்கிர மித்துள்ளதாக விஸ்வநாத் கடந்த டிசம்பர் மாதம் காவல் நிலையத்திலும், வட்டாட்சியரிடமும் புகார் அளித்துள்ளார். மேலும் இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாநகரச் செயலாளர் சி.பி.ஜெயராமனிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து சி.பி.ஜெயராமன், ஒன்றியச் செயலாளர் ராஜாரெட்டி, மாவட்டக் குழு உறுப்பினர் நாராயண மூர்த்தி, சேதுமாதவன், எஸ்.ஆர்.ஜெய ராமன், ஆனந்தகுமார், நாகேஷ்பாபு, மஞ்சு ஆகியோர் இதுகுறித்து பார்வையிட அங்கு சென்றபோது ஜங்கம்மா ரெட்டியின் மகன்கள் குருபிரசாத், ஸ்ரீதர் மற்றும் சிலர் சி.பி.ஜெயராமன், நாராயணமூர்த்தி ஆகி யோரை கடுமையாக தாக்கியுள்ளனர். அதை தடுக்கச் சென்ற சேதுமாதவன், எஸ்.ஆர்.ஜெயராமனையும் தாக்கியுள்ளனர்.     தாக்குதலுக்குள்ளான சி.பி.ஜெயராமன், நாராயணமூர்த்தி ஆகியோர் ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து கட்சியின் மாவட்டச் செய லாளர் (பொறுப்பு) ஜி.கே.நஞ்சுண்டன் வெளி யிட்டுள்ள அறிக்கையில், கட்சியினர் தாக்கப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரி வித்தவுடன், தாக்குதல் தொடுத்தவர்கள் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும் கால்வாய் மற்றும் ஆற்றுப் புறம்போக்கு ஆக்கிர மிப்பு குறித்து வட்டாட்சியர் வருவாய் துறை யினர் நேரில் சென்று பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளார்.