districts

மார்ச் 1 முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை நலத்திட்ட உதவிகளுடன் கொண்டாட முடிவு

கரூர், பிப்.27 - திமுக-வின் கரூர் மாவட்டம் சார்பில் கரூர் அறிவாலயத்தில் உள்ள கூட்ட ரங்கில் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திமுக  கரூர் மாவட்ட பொறுப்பாளரும், மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை  துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தலைமையேற்று சிறப்புரையாற்றி னார். அப்போது அவர் பேசுகையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாநக ராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட கழக வேட்பா ளர்கள் மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை வெற்றி பெற வைத்த கரூர்  மாவட்ட வாக்காளர்களுக்கு இக்கூட்டத்தின் வாயிலாக நன்றியை தெரி வித்துக் கொள்கிறேன்.  மேலும், மார்ச் 1 ஆம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது பிறந்த நாள் விழாவை கரூர் மாவட்டத் தில் சிறப்பாக கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள  மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் கழகம் மற்றும் வார்டு, கிளை கழகத்தின் சார்பில் கழகக் கொடியை ஏற்றி இனிப்பு வழங்கியும், ஏழை-எளிய மக்கள்  பயன்பெறும் வகையில் மார்ச் 1 ஆம் தேதி கரூர் மாவட்ட அரசு மருத்துவ மனையில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் ஒரு கிராம் தங்க மோதி ரம் வழங்குதல், கல்வி படிப்பிற்கு நிதியுதவி, வேஷ்டி, சேலைகள் வழங்குதல்,  ஆதரவற்ற இல்லங்களுக்கு உணவு வழங்குதல் உள்ளிட்ட நலத்திட்ட உதவி கள் வழங்கப்பட உள்ளது. பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு விளை யாட்டு போட்டிகள் நடத்துவது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்றார்.