districts

img

உள்ளாட்சித் துறை ஊழியர் சங்க தோழர் வையாபுரி மரணம்

கரூர், மார்ச் 12 - கரூர் மாவட்டம் வெள்ளி யணை அருகில் உள்ள செல்லாண் டிபாளையத்தை சேர்ந்தவர் சி.வை யாபுரி. இவர் கரூர் மாவட்ட கிராம ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கத்தின் கரூர் மாவட்ட தலைவராக திறம்பட செயல்பட்டார். கிராம பஞ்சாயத்து ஊழியர் களை, குறிப்பாக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்களை (ஓஹச்டி ஆப ரேட்டர்) சிஐடியு சங்கத்தில் இணைப்பதில் முன்னணி வகித்தவர். வெள்ளியணை மற்றும்  அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமப் பகுதி களில் மக்களின் பிரச்சனைகளை கையில் எடுத்து கோரிக்கைகள் நிறைவேறும் வரை சிஐடியு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் தொடர் போராட்டங்களை நடத்தியதில் பெரும் பங்கு வகித்துள்ளார்.  தோழர் வையாபுரி சாலை விபத்தில் படுகா யமடைந்து கோவையில் உள்ள மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் கரூர் அரசு மருத்துக்கல்லூரி மருத்துவ மனையில் உடற்கூராய்வு செய்யப்பட்டு, கரூர்  பாலம்மால்புரத்தில் உள்ள மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. 

அஞ்சலி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் கரூர் மாவட்ட மூத்த தலைவர்  ஜி.ரத்தினவேலு, கட்சியின் மாவட்ட செயலாளர் மா.ஜோதி பாசு, சிஐடியு மாவட்ட தலைவர் ஜி. ஜீவானந்தம், மாவட்ட குழு உறுப் பினர்கள் ஆர்.ஹோச்சுமின், கா.கந்தசாமி,  ஜி.ஜீவானந்தம், கட்சியின் கரூர் மாநகரச்  செயலாளர் எம்.தண்டபாணி, கரூர் ஒன்றிய  செயலாளர் ராஜேந்திரன், டாஸ்மாக் சங்க  மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி,  மாநகரக் குழு உறுப்பினர்கள் ராஜேந்தி ரன், சக்திவேல், ராமகிருஷ்ணன் மற்றும்  கணேசன் உள்ளிட்டோர் தோழர் வையாபுரி யின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.  அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கும், தோழர்களுக்கும், உறவி னர்களுக்கும் சிஐடியு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டக் குழு  சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலை யும் தெரிவித்தனர்.