districts

ஜூன் 26 கரூரில் தேசிய மக்கள் நீதிமன்றம்

கரூர், ஜூன் 5 - தேசிய சட்டப் பணிகள்  ஆணைக்குழு மற்றும் மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு உத்தரவின் பேரில் 26.6.2022 ஆம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் கரூர் தாந்தோணிமலையில் உள்ள ஒருங்கிணைந்த நீதி மன்ற வளாகத்திலும், குளித் தலை நீதிமன்ற வளாகத்தி லும் நடைபெற உள்ளது. இதில் கிருஷ்ணராயபுரம் தாலுகா சார்ந்த வழக்கு கள் குளித்தலை நீதிமன்றத் திலும், அரவக்குறிச்சி தாலுகா சார்ந்த வழக்குகள் கரூர் தாந்தோணிமலை ஒருங் கிணைந்த நீதிமன்றத்திலும் நடைபெற உள்ளது. தேசிய மக்கள் நீதிமன்றத் தில் திருமண முறிவு சம்பந்த மான வழக்குகள் தவிர, காசோலை மோசடி வழக்கு கள், வங்கிக்கடன், விபத்து வழக்குகள், தொழிலாளர் நல வழக்குகள், அனைத்து உரிமைகள் வழக்கு கள் சம்பந்தமான மற்றும்  இதர வழக்குகள் அனைத் தும் முடிக்கப்படும். எனவே  வழக்காளிகள் மற்றும்  பொதுமக்கள் இதனை பயன் படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.  ஏதேனும் சந்தேகம் இருந் தால் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவல கத்தைத் தொடர்பு கொள்ள லாம் என மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு தலை வர் /மாவட்ட நீதிபதி ஆர்.சண்முகசுந்தரம் மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, செயலர்/சார்பு நீதிபதி எம்.பாக்கி யம் ஆகியோர் தெரிவித் துள்ளனர். மேலும் 04324-296560, 04324-296570 என்ற  எண்ணில் தொடர்பு கொண்டு  விளக்கம் பெறலாம்.