districts

img

‘இளைஞர்களுக்கு வேலை கொடு’ வாலிபர்கள் சைக்கிள் பயணத்திற்கு உற்சாக வரவேற்பு! பேராதரவு!!

கரூர், ஏப்.30 - ஒன்றிய மோடி அரசு பொறுப்பேற்றது முதல் விலைவாசி உயர்வு கட்டுக்கடங்காமல் செல்கிறது. பொதுத்துறை நிறுவனங்கள் தனி யாருக்கு தாரை வார்க்கப்படுகிறது. மாண வர்கள், இளைஞர்கள் கல்வி, வேலை வாய்ப்பு கேள்விக்குறியாகி வருகிறது. நாட்டில் விவசாயிகள், தொழிலாளர்கள், பொது மக்கள், சிறுபான்மையினருக்கு எதிரான  சட்டங்கள், நடவடிக்கைகள், ஒடுக்குமுறைகள் சுதந்திர இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்த வண்ணம் உள்ளன.  இந்நிலையில், “இளைஞர்களுக்கு வேலை கொடு” என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் 3000 கி.மீ சைக்கிள் பிரச்சாரம் நாட்டின் நான்கு முனைகளி லிருந்து (சென்னை, குமரி, கோவை, பாண்டிச் சேரி) புறப்பட்டு மே 1 அன்று திருச்சியில் (பொதுக்கூட்டம்) சங்கமிக்கிறது. இந்த பிரச்சார பயணத்தில், மக்களுக் கான கோரிக்கைகளை வலியுறுத்தியும், ஒன்றிய மோடி அரசின் மக்கள் விரோத கொள் கைகளை தோலுரித்தும், இளைஞர்களுக்கு வேலை வழங்க வலியுறுத்தியும், மக்களிடம்  வாலிபர் சங்கத்தினர் பரப்புரை மேற்கொண்டு  வருகின்றனர்.  சைக்கிள் பிரச்சார பயணத்திற்கு கரூர்,  புலியூர், கிருஷ்ணராயபுரம் ஆகிய இடங்க ளில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கரூர்  மாநகர குழு சார்பில் பட்டாசு வெடித்து  சிறப்பாக வரவேற்றனர். வெங்கமேடு கடை வீதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் கே.ராஜா தலைமை வகித்தார். முன்னாள் மாவட்டக் குழு உறுப்பினர் எம்.தியாகராஜன் வரவேற்று  பேசினார். வாலிபர் சங்க கரூர் மாவட்ட முன்னாள் தலைவர் மா.ஜோதிபாசு, பயணக் குழு தலைவர் சி.பாலசந்திரபோஸ், மாநில துணைத் தலைவர் கே.எஸ்.கனகராஜ், கரூர்  மாநகராட்சி 41-வது வார்டு மாமன்ற உறுப்பி னர் எம்.தண்டபாணி, தமிழ்நாடு அரசு ஊழியர்  சங்க மாநில துணை தலைவர் ஞானதம்பி, மாவட்ட தலைவர் சுப்ரமணியன், மாவட்ட செய லாளர் சக்திவேல், கல்வித்துறை அலுவலர் கள் சங்க மாநில பொதுச் செயலாளர் பொன் ஜெயராம் ஆகியோர் பேசினர். 

கரூர் பேருந்து நிலையம்
சனிக்கிழமை காலை கரூர் பேருந்து  நிலையம் ரவுண்டானா முன்பு நடைபெற்ற சைக்கிள் பிரச்சாரப் பயண துவக்க கூட்டத் திற்கு, வாலிபர் சங்கம் முன்னாள் தலைவர் எம்.ஏ.ஸ்டாலின் தலைமை வகித்தார். சிஐடியு  மாவட்ட தலைவர் ஜி.ஜீவானந்தம் கொடிய சைத்து சைக்கிள் பயணத்தை துவக்கி வைத்தார். மாவட்ட செயலாளர் சி.முருகே சன், எல்ஐசி ஊழியர் சங்க தஞ்சை கோட்ட  துணைத் தலைவர் வி.கணேசன், பயணக் குழு தலைவர் சி.பாலசந்திரபோஸ், மத்தியக் குழு உறுப்பினர் எஸ்.மணிகண்டன், வாலிபர் சங்க முன்னாள் மாவட்ட செயலாளர் எம்.தண்டபாணி ஆகியோர் பேசினர். தீண்டாமை ஒழிப்பு முன்னணி கரூர் மாவட்ட செயலாளர் ஆர்.ஹோச்சுமின், டாஸ்மாக் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் ப.சரவணன், ஆட்டோ  சங்க மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் கலந்து  கொண்டனர்.

குமரன் குடில் கிளை
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கரூர் மாநகரத்திற்கு உட்பட்ட குமரன் குடில் கிளையின் சார்பில் புலியூர் கடைவீதியில் சைக்கிள் பிரச்சார பயண குழுவிற்கு உற்சாக மாக வரவேற்பு அளித்தனர். பயணக்குழு உறுப்பினர் ராஜா பேசினார்.  சைக்கிள் பிரச்சார பயணக் குழுவி னருக்கு, பொதுமக்கள்-வியாபாரிகள் தாமாக  முன் வந்து வாழைப்பழம், பிஸ்கட், திராட்சை  பழம், நொங்கு உள்ளிட்ட உணவு பொருட்களை  வழங்கி ஆதரவளித்தனர். கரூர் லைட் ஹவுஸ்  கார்னரில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு  பயணக்குழு தலைவர்கள் மாலை அணி வித்து மரியாதை செலுத்தினர்.

தஞ்சாவூர்
பாண்டிச்சேரியிலிருந்து வாலிபர் சங்க மாநில துணைச் செயலாளர் சிங்கார வேலன்  தலைமையில், வாலிபர் சங்க மாவட்டச் செய லாளர் கே.அருளரசன், மாவட்டத் தலைவர் ஆம்பல் துரை.ஏசுராஜா உள்ளிட்டோர் அடங்கிய சைக்கிள் பயணக் குழுவிற்கு வெள்ளிக்கிழமை மாலை, தஞ்சை மாநகர எல்லையான பள்ளியக்ரஹாரத்தில் உற்சா கத்துடன் வாணவேடிக்கைகள், பட்டாசுகள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் பி.செந்தில்குமார், என்.சிவ குரு, மாவட்டக்குழு உறுப்பினர் என்.குருசாமி, என்.சரவணன், மாநகரச் செயலாளர் எம்.வடிவேலன், மாநகரக்குழு உறுப்பினர்கள் வீ.கரிகாலன், வீ.ராஜன், எம்.ராஜன், வசந்தி, இந்திய மாணவர் சங்கம், மாநில துணைச் செயலாளர் ஜி.அரவிந்தசாமி, மாவட்டத் தலைவர் அர்ஜூன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  முன்னதாக, எம்ஜிஆர் நகர், பம்பிங் ஸ்டேஷன் கிளை உறுப்பினர்கள், மாநக ரக்குழு சார்பில், பட்டாசு வெடித்தும், மலர் தூவி யும், ஆர்த்தி எடுத்தும் சைக்கிள் பயணக்  குழுவிற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதேபோல், விரைவுப் போக்குவரத்துக் கழக சிஐடியு சங்கம் சார்பில் சிஐடியு மாவட்டச் செய லாளர் சி.ஜெயபால் தலைமையில், உற்சாக  முழக்கங்களோடு வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, தஞ்சாவூர் ரயிலடியில் பொது கூட்டம் நடைபெற்றது. இதில், சிபிஎம் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கோ.நீல மேகம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலச்  செயலாளர் சாமி.நடராஜன் மற்றும் மாவட்டச் செயற்குழு, மாவட்டக்குழு உறுப்பினர்கள், கட்சியினர் கலந்து கொண்டனர்.  சனிக்கிழமை காலை தஞ்சை மணி மண்டபத்தில் இருந்து பயணக்குழு துவங்கி யது. தொடர்ந்து வல்லம் கடைவீதியில் சிபிஎம் ஒன்றியச் செயலாளர் கே.அபி மன்னன் தலைமையில் தப்பாட்டத்துடன் வர வேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து  செங்கிப்பட்டியில் வரவேற்பு அளிக்கப் பட்டது. இதில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் என்.வி.கண்ணன், எஸ்.தமிழ்ச்செல்வி, ஒன்றிய செயலாளர்கள் போது வடக்கு எம்.ரமேஷ், தெற்கு சி.பாஸ்கர்,  வாலிபர் சங்க மாவட்ட தலைவர் இயேசுராஜா, மாவட்ட செயலாளர் கே.அருளரசன், வடக்கு  தெற்கு ஒன்றிய வாலிபர் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து மாவட்ட எல்லையான புதுக்குடியில் இருந்து, பயணக்குழு திருச்சி சென்றது.