கரூர், டிச.30 - கரூர் மாவட்டம் மண்மங்கலம் வட்டத் திற்கு உட்பட்ட ராமேஸ்வரப்பட்டி, அண்ணாநகர், சிவியாம்பாளையம் ஆகிய கிராமப் பகுதிகளில், ஒரே வீட்டில் இரண்டுக்கும் மேற்பட்ட குடும் பங்கள் வசித்து வருகின்றன. இதனால் பெரும் மன உளைச்சலுக்கும், அவ திக்கும் ஆளாகின்றனர். எனவே, சொந்த வீட்டுமனை இல்லா தோருக்கு, இலவச வீட்டுமனை வழங்கிட வேண்டும், பட்டா பெயர் மாற்றம் செய்து கொடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், அனைத்து அரசு அலுவலகங்களிலும் பலமுறை மனு கொடுத்தும், எவ்வித நடவடிக் கையும் எடுக்கவில்லை. இதில் அலட்சி யமாக செயல்படும் கரூர் மாவட்ட நிர்வா கத்தை கண்டித்தும், கட்டுமான தொழி லாளர் சங்கம் (சிஐடியு) மண்மங்கலம் கிளை சார்பில், மண்மங்கலம் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு முற்று கைப் போராட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவர் ஆர்.துரைசாமி தலைமை வகித் தார். கட்டுமான சங்கத்தின் சார்பில் தலைவர்கள், பொதுமக்கள் போராட் டத்தை துவக்கினர். அப்போது, காவல் துறை மாவட்ட உதவி கண்காணிப்பா ளர் சுமூக பேச்சுவார்த்தையில் ஈடுபட் டார். அதில் சுமூக முடிவு எட்டப்பட்ட தன் அடிப்படையில் மண்மங்கலம் வட்டாட்சியரை சந்தித்து மீண்டும் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. மனுவின் மீது ஒரு மாத காலத் திற்குள் தீர்வு காணப்படும் என உறுதி யளித்ததன் அடிப்படையில், முற்றுகை போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது. சிஐடியு மாவட்டச் செயலாளர் சி. முருகேசன், கட்டுமான சங்க மாவட்டச் செயலாளர் சி.ஆர்.ராஜாமுகமது, மாவட்டத் தலைவர் ப.சரவணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் ஒன்றியச் செயலாளர் எம்.ராஜேந்திரன், மாவட்டக் குழு உறுப்பி னர் கே.சண்முகம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். ஆட்டோ சங்க மாவட்ட தலைவர் என்.ரங்கராஜ், கட்டுமான சங்க மாவட்ட துணை தலைவர் வி.கந்தசாமி, சாலை யோர வியாபாரிகள் சங்க மாவட்ட தலை வர் செந்தில்குமார் உள்ளிட்ட நூற்றுக் கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சங்கத்தின் மண்மங்கலம் கிளை தலை வர் மு.பாப்பாத்தி நன்றி கூறினார்.