நாகர்கோவில், மார்ச் 22- இந்தியாவின் 75ஆவது சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழா வருகின்ற 24.03.2022 முதல் 30.03.2022 வரை எஸ்.எல்.பி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெறவுள்ளது. மாபெ ரும் மாராத்தான் போட்டி, சைக்கிள் பேரணி யும், சுதந்திர போராட்ட தியாகிகளின் மணல் சிற்பம் உருவாக்கும் போட்டி, மாபெரும் படகுப் போட்டி, கலைப்போட்டி, பேச்சுப்போட்டிகளு டன் ஒருவார கால கொண்டாட்டங்களுக்கு குமரி மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: கன்னியா குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் இம்மாவட்டத்தில் 75- ஆவது சுதந்திர திருநாள் அமுத பெருவிழா நடத்துவது குறித்து துறை அலுவலர்களுட னான கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சி யர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத் திற்கு பின், மாவட்ட ஆட்சியர் கூறியதாவது: தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி, இந்திய திருநாட்டின் சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகம் மற்றும் வரலாற்றை பறைசாற்றும் வகையில், 75ஆவது சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழா நிகழ்ச்சியானது, கன்னி யாகுமரி மாவட்டம், நாகர்கோவில் எஸ்.எல்.பி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வரும் 24.03.2022 முதல் 30.03.2022 வரை ஏழு நாட்கள் தொடர்ந்து கொண்டாடப்படவுள்ளது. இவ்விழாவில் சுதந்திரப் போராட்ட களத்தில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக தேசிய, மாநில அளவில் மற்றும் கன்னி யாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட போராட்ட வீரர்க ளின் புகைப்படங்களை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்க ளின் பார்வைக்கு காட்சிப்படுத்த மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலருக்கு அறிவு றுத்தப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு அர சால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், சாதனைகள், நலத்திட்ட உதவிகள் குறித்து அரங்குகளில் காட்சிப்படுத்த துறை அலுவ லர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், 75ஆவது சுதந்திரத் திருநாள் அமுதப் பெரு விழாவினையொட்டி, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், மார்ச் 25 வெள்ளியன்று விளை யாட்டுத்துறை, பள்ளி மற்றும் உயர்கல்வித் துறையின் சார்பில் 5 கிலோ மீட்டருக்கான மாபெரும் மாராத்தான் போட்டியானது காலை 6.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக முகப்பிலிருந்து துவக்கி வைக்கப்படு கிறது. மார்ச் 26 சனியன்று விளையாட்டுத் துறை, பள்ளி மற்றும் உயர்கல்வித்துறையின் சார்பில் காலை 6.30 மணிக்கு மாவட்ட ஆட்சி யர் அலுவலக வளாக முகப்பில் மாபெரும் சைக்கிள் பேரணியும், காலை 8 மணிக்கு சுற்றுலாத்துறையின் சார்பில் சுதந்திர போராட்ட தியாகிகளின் மணல் சிற்பம் உருவாக்கும் போட்டி குளச்சல் கடற்கரையில் நடைபெற வுள்ளது. 27 ஆம் தேதி ஞாயிறன்றுன்று காலை 10 மணிக்கு கன்னியாகுமரி கடற்கரையில் மீன்வளத்துறை, சுற்றுலாத்துறை மற்றும் விளைாட்டுத்துறையின் சார்பில் மாபெரும் படகுப்போட்டி நடைபெறவுள்ளது. மார்ச் 29 செவ்வாயன்று காலை 9 மணிக்கு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ளும் கோலப்போட்டியானது எஸ்.எல்.பி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது. மார்ச் 30 புதனன்று காலை 9 மணிக்கு எஸ்.எல்.பி அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்து கொள்ளும் மாபெரும் கலை போட்டி நடை பெறவுள்ளது. மேலும், மாவட்ட அளவில் பள்ளி கல்லூரி மாணவ, மாணவியர்களுக் கிடையே பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டிகள் நடத்திட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் உயர் கல்வித்துறை மண்டல இணை இயக்குநர் ஆகியோர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்போட்டிகள் மற்றும் சிறந்த அரங்குகள் அமைத்து முதல் மூன்று இடங்களை பெறுப வர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். அனைத்து நிகழ்வுகளிலும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், சமூக ஆர்வலர்கள், தன்னார்வலர்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டு 75 ஆவது சுதந்திரத்திருநாள் அமுதப் பெருவி ழாவினை சிறப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவ லர் அ.சிவப்பிரியா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ச.சா.தனபதி, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பா.ஜாண் ஜெகத் பிரைட், இணை இயக்குநர் (வேளாண்மைத் துறை) சத்தியஜோஸ், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அ.புகழேந்தி, உதவி இயக்கு நர் (பேரூராட்சிகள்) குற்றாலிங்கம், தோட்டக் கலைத்துறை துணை இயக்குநர் ஷீலா ஜாண், கோணம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராசிரியர் அமுதன், மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் செந்தில்குமார், மாநகர நல அலுவலர் விஜய சந்திரன் உட்பட துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.