நாகர்கோவில், பிப்.17- கன்னியாகுமரி மாவட்டத்தில் கேரளத்தின் பழக்க வழக்கங்கள் மட்டுமல்ல அரசியலின் பிரதி பலிப்பும் உண்டு. இம்முறை அது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு சாதகமாக உள்ளது என்பதை தேர்தல் களம் உணர்த்தி வரு கிறது. சிபிஎம் வேட்பாளர்களின் வெற்றிக்கு உறுதுணையாக தற்போ தைய சூழல் அமைந்துள்ளது. குமரி மாவட்ட மக்களில் கணிச மான பகுதியினர் வேலை, கல்வி, மருத்துவ சிகிச்சைக்கு கேரளத்தை சார்ந்துள்ளனர். இந்த மூன்று துறை களிலும் கேரள மக்கள் பெற்று வரும் பயன்களை குமரி மக்கள் நேரில் பார்த்து ஆச்சரியப்படுகிறார்கள். அனைத்துக்கும் மேலாக மொழி, ஏழை - பணக்காரன், சாதி, மதம் போன்ற எந்த பாகுபாடுகளும் இல்லாமல் மனித நேயம் கொண்ட அணுகுமுறைக்கு அங்கு நீடிக்கும் இடதுசாரி அரசியல் கலாச்சாரம் மக்களை மாற்றி வருவதை கண் கூடாக பார்க்கிறார்கள். நாட்டிலேயே ஊழல் குறைந்த மாநிலம் என்பது பெருமை மட்டுல்ல அதன் பயன் களை கேரள மக்களோடு குமரி மாவட்ட மக்களும் பகிர்ந்து வாழ் கிறார்கள்.
விருந்தினர்’ தொழிலாளர்கள்
திருவனந்தபுரம் டெக்னோ பார்க்கில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான படித்த இளை ஞர்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ள னர். காலையிலும் மாலையிலும் அவர்கள் ரயில்கள், பேருந்து களில் அன்றாடம் சென்று திரும்பு வதை காண முடிகிறது. குமரி மாவட்ட த்திலிருந்து ரப்பர் தோட்ட தொழி லாளர்களாகவும் கட்டுமான தொழி லாளர்களாகவும் கேரளம் சென்று குடும்பத்துடன் தங்கி வேலை செய்பவர்கள் ஏராளம். தமிழகம், மேற்கு வங்கம், உ.பி உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்து புலம்பெயர்ந்தோர் சுமார் 35 லட்சம் பேர் கேரளத்தில் உள்ளதாக முன்னாள் நிதி அமைச்சர் டாக்டர் தாமஸ் ஐசக் ஒருமுறை சட்ட மன்றத்தில் தெரிவித்தார். கோவிட் பெருந்தொற்று காலத்தில் இவர்களை அதிதி (விருந்தினர்) தொழிலாளிகள் என அன்பு செலுத்தி பல்வேறு உணவுப் பொருட்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை பாகுபாடின்றி பெற முதல்வர் பினராயி விஜயன் வழி வகுத்தார். கேரள தொழில் வளர்ச்சி மையம் (KSIDC), பவனம் பவுண் டேசன் கேரளா என்கிற அரசு நிறுவ னங்கள் இணைந்து கினலூர், கோழிக் கோடு, கலமசேரி கின்ஃபிறா ஹைடெக் பார்க் (எர்ணாகுளம்) ஆகிய இடங்களில் நவீன வசதிகளு டன் அடுக்குமாடி குடியிருப்புகளை குறைந்த வாடகைக்கு கட்டிக் கொடுத்துள்ளன.
கஞ்சிக்கோடு சிறப்பு பொருளாதார மண்டலத்தில் முதலாவது அப்னாகர் அடுக்குமாடி கட்டிடத்தை கேரள முதல்வர் பின ராயி விஜயன் 2019 பிப்ரவரியில் திறந்து வைத்தார். 600 பேர் தங்கும் வசதி கொண்டது இந்த அடுக்கு மாடி. இதில் சமையல் மற்றும் உணவுக் கூடங்கள், துணிதுவைக் கும் வசதிகள் உட்பட செய்யப் பட்டுள்ளன. திருவனந்தபுரம் மாவட்டத்தில் 131 அரசு மருத்துவமனைகள் உள்ளன. இதில் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை, எஸ்ஏடி, ஆர்சிசி, பூஜப்புரா ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி, தைக்காடு குழந்தைகள் பிரிவு போன்றவை உயர் சிகிச்சை மையங் களாக உள்ளன. இவற்றில் நாள் தோறும் ஆயிரக்கணக்கான தமிழ கத்தைச் சேர்ந்த நோயாளிகள் சிகிச்சை பெறுகிறார்கள். தமிழக எல்லை அருகில் உள்ள பாரசாலா, நெய்யாற்றின்கரா, நெடுமங்காடு போன்ற தாலுகா மருத்துவமனைகள் தமிழக எல்லையில் உள்ள பல்லா யிரக்கணக்கான மக்களுக்கு பய னளித்து வருகின்றன. இதுபோல் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஏராள மான மாணவர்கள் மருத்துவம் சார்ந்த படிப்புகள் மற்றும் இதர உயர் கல்விக்கும் கேரள கல்வி நிறுவனங் களை பயன்படுத்தி வருகிறார்கள்.
குலசேகரத்திலிருந்து தினமும் திருவனந்தபுரம் கழக்கூட்டம் டெக்னோ பார்க்குக்கு வேலைக்கு சென்று வருபவர் வினோத். இவர் கூறுகையில், இரண்டு மாநிலங் களின் ரோடுகளில் தினமும் பயணம் செல்கிறேன். அதுவே மாறுபட்ட அனுபவமாக உள்ளது. தமிழக சாலைகள் ஆபத்தான குண்டும் குழியுமாக பயணத்தில் அலுப்பைத் தருகின்றன. அங்கு உள்ளாட்சி தேர்தல் முறையாக நடத்தப்பட்டு மக்களின் தேவைகளை பேசும் பிரதி நிதிகள் உள்ளதால் குறைகள் உட னுக்குடன் சரி செய்யப்படுகின்றன என்றார். கொல்லங்கோடு நகராட்சிக்கு உட்பட்ட கேரளத்தை ஒட்டிய எல்லை கிராமமான நித்திரைவிளை யைச் சேர்ந்தவர் குமரேசன். இவர் தனது மனைவியை திருவனந்தபுரம் ஸ்ரீஅவிட்டம் திருநாள் (எஸ்ஏடி) மருத்துவமனையில் பிரசவத்துக் காக சேர்த்துள்ளார். அப்போது ஏற்பட்ட தனது அனுபவத்தை தெரி வித்தார். எஸ்ஏடி மருத்துவமனை பெண்கள், குழந்தைகளுக்கானது. தினமும் இங்கு 400 பிரசவங்கள் வரை நடைபெறுகின்றன. இதில் நூற்றுக் கும் மேற்பட்டவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். முடிந்தவரை அறு வை சிகிச்சை தவிர்க்கப்படுகிறது. ஆரம்பத்தில் பாறசாலை மருத்துவ மனையில் கொண்டு சென்றபோது கருக்கலையும் நிலை இருந்ததால் எஸ்ஏடிக்கு அனுப்பினார்கள். முதல் குழந்தை குழித்துறை அரசு மருத்துவ மனையில் அறுவை சிகிச்சையில் பிறந்தது. ஆனாலும் இரண்டாவது குழந்தை அறுவை சிகிச்சை இல்லாமலே எஸ்ஏடியில் பிறந்தது என்றார். இதுபோன்ற சொந்த அனு பவங்களின் அடிப்படையில் குமரி மாவட்ட வாக்காளர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வாக்களிக்கும் மனநிலையில் உள்ளனர். அதோடு பாஜக நடத்தும் மதவெறி அரசி யலால் வெறுப்படைந்துள்ள மக்கள் அதற்கு மாற்றாக கேரளத்தைப் போல் சிபிஎம் தலைமையில் தங்க ளது உள்ளாட்சி அமைப்புகள் வர வேண்டும் என விரும்புகிறார்கள்
. -சி.முருகேசன்