districts

காஞ்சிபுரம் மாநகராட்சியை திமுக கைப்பற்றியது

காஞ்சிபுரம், பிப்.22- காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் மாநகராட்சி,    வாலாஜாபாத், உத்திரமேரூர் ஆகிய பேரூராட்சிகளையும் திமுக,வே கைப்பற்றியது. திருப்பெரும்புதூர் பேரூராட்சி இழுபறியில் உள்ளது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப் பதிவு கடந்த 19ம் தேதி நடந்தது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் மாநகராட்சி,  திருப்பெரும்புதூர், வாலாஜாபாத், உத்திரமேரூர் ஆகிய பேரூராட்சிகளுக்கும் தேர்தல் நடந்து முடிந்தது. இவைகளுக்கான தேர்தல் முடிவுகள் வருமாறு: காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள 51 வார்டுகளில்  தி.மு.க., அதன் கூட்டணி கட்சிகள் 32  வார்டுகளையும், அ.தி.மு.க., 9 வார்டுகளையும், பா.ம.க., 2 வார்டு களையும், பாஜக ஒரு வார்டடையும் கைப்பற்றின. சுயேச்சைகள் 6 வார்டுகளில் வெற்றிபெற்றுள்ளனர்.   குன்றத்தூர் நகராட்சியில் 30 வார்டுகளில் திமுக 22 வார்டுகள் வெற்றி, அதிமுக 5, காங்கிரஸ் 2, சுயேட்சை -1 மாங்காடு நகராட்சி-27 வார்டுகளில் திமுக 14, மதிமுக- 2, அதிமுக- 6, சுயேட்சை 5 வார்டுகளை கைப்பற்றின. வாலாஜாபாத் பேரூராட்சி: இங்குள்ள மொத்தம் 15 வார்டுகளில் அ.தி.மு.க.,  5 வார்டுகளையும், தி.மு.க., 10 வார்டு களை பிடித்தது. வாலாஜாபாத் பேரூ ராட்சியும் தி.மு.க.,வே கைப்பற்றியது. திருப்பெரும்புதூர் பேரூராட்சியில் மொத்த முள்ள 15 வார்டுகளில் தி.மு.க., 7 வார்டுகளை யும் சுயேச்சை 4 வார்டுகளையும், அ.தி.மு.க., 3 வார்டுகளையும், பா.ம.க., ஒரு வார்டையும் கைப்பற்றியுள்ளன. திருப்பெரும்புதூர் பேரூராட்சியை யார் கைப்பற்றுவது என, முடிவு செய்யும் பொறுப்பு சுயேச்சைகைகளின் கையில் உள்ளது. திருப்பெரும்புதூர் பேரூராட்சியின்   4ஆவது வார்டில் போட்டியிட்ட வேட்பாளர் கணேசன், 6 ஆவது வார்டில் போட்டியிட்ட  வேட்பாளர் முருகேசன்,12 ஆவது வார்டில் போட்டியிட்ட வேட்பாளர் ரமேஷ்பாபு ஆகியோருக்கு ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை. மேலும் 6 வார்டுகளில் போட்டியிட்ட அமமுக வேட்பாளர்களுக்கு மொத்தம் 20 வாக்குகள் தான் பதிவானது. உத்திரமேரூர் பேரூராட்சியில் மொத்த முள்ள 18 வார்டுகளில் திமுக 14 வார்டு களையும், அ.தி.மு.க., 3 வார்டுகளையும், பா.ம.க. ஒரு வார்டையும் பிடித்துள்ளது. இந்த பேரூராட்சியை திமுக, தக்க வைத்துள்ளது.