கள்ளக்குறிச்சி, பிப். 18- கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டை தாலுகா ஆர்.ஆர். குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வெங்கடேசன். இவருடைய நண்பர் உத்திராணம். இவர்கள் இருவரும் மோட்டார் பைக்கில் உளுந்தூர்பேட்டைக்கு சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது சென்னையில் இருந்து ஏற்காட்டுக்கு சென்ற கார் இவர்கள் பைக் மீது மோதியது. இதில் உத்திராணம் சம்பவ இடத்திலேயே பலியானார். வெங்கடேசன் பலத்த காயமடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உளுந்தூர்பேட்டை காவல் துறையினர் உத்திரானம் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த வெங்கடேசனை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.