districts

img

குழந்தைகளுக்கு விளையாட்டை ஊக்கப்படுத்த வேண்டும்: ஆட்சியர்

கள்ளக்குறிச்சி, நவ. 14- குழந்தைகளுக்கு வெளிப்புற விளையாட்டை ஊக்கப்படுத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் அறிவுறுத்தி னார். குழந்தைகள் தினத்தையொட்டி கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சமூக நலத்துறை, குழந்தைகள் பாது காப்பு நலத்துறை மற்றும் கள்ளக்குறிச்சி சைல்டு லைன் 1098இன் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் குழந்தைகளுடன் கேக் வெட்டி கொண்டாடினர். பின்னர் சைல்டு லைன் எனது நண்பர் என்று வாசகம் அடங்கிய பட்டகளை குழந்தைகளின் கையில் கட்டினார். அப்போது குழந்தைகளுக்கு வெளிப்புற விளையாட்டை அதிகளவில் ஊக்கப்படுத்த பெற்றோர்களும், ஆசிரியர்களும் முன்வர வேண்டும் என அறிவுறுத்தினார். இதில் மாவட்ட வருவாய் அலு வலர் சத்தியநாராயணன், சமூக பாதுகாப்பு நல அலுவலர் தீபிகா, குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் இளையராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.