districts

img

மருந்து-மாத்திரை: கர்ப்பிணிகளுக்கு அறிவுரை

கள்ளக்குறிச்சி, மார்ச் 15- கர்ப்பிணி பெண்கள் மகப்பேறு மருத்துவர்கள் ஆலோசனையின்றி தனியார் மருந்தகங்களில் மாத்திரை கள் மற்றும் மருந்துகள் வாங்கி உப யோகிப்பதை தவிர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் அறிவுறுத்தினார். கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை ஆரம்ப சுகா தார நிலையம் ரிஷிவந்தியம் ஒன்றியத்திற்குட்பட்ட வேளானந்தல் ஊராட்சி மற்றும் சுளாங்குறிச்சி ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் செவ்வாயன்று (மார்ச் 15) ஆய்வு செய்தார். கர்ப்பிணிகளுக்கு அளிக்கப் பட்டு வரும் சிகிச்சை முறைகள், பரா மரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளின் விவரங்கள் குறித்து ஆய்வு செய்தார். தொடர்ந்து கருவுற்ற பெண்களுக்கு வழங்கப்படும் தாய் சேய் நல அட்டை, 3 மாதங்களுக்கு சத்து மாத்திரைகள் முறையாக வழங்கப்படுகிறதா என்பது குறித்து கேட்டறிந்தார். மேலும் கர்ப்பிணி பெண்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை கள் மிகுந்த கவனத்துடனும் முழு ஈடுபாட்டுடனும் மேற்கொள்ள மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார். உடல் சார்ந்த பலவீனமாக உள்ள கர்ப்பிணி பெண்களுக்கு மாதந்தோறும் சிறப்பு மகப்பேறு மருத்துவர்கள் தலைமையில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்திடவும், மகப்பேறுக்கு பின்னர் 3 மாதங்களுக்கு குழந்தை களின் வளர்ச்சி மற்றும் தாய் சேய் ஆரோக்கியம் தொடர்பாக மருத்துவர்கள் தொடர் கண்காணிப்பையும், விழிப்பு ணர்வினையும் ஏற்படுத்த வேண்டும்.

மேலும் கருவுற்ற பெண்கள் தங்கள் பகுதிக்குட்பட்ட கிராம செவிலியர்களிடம் பெயர் பதிவு செய்து செவிலியர்களின் ஆலோசனையின்படி அரசு மருத்துவமனைகளுக்கு சென்று மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும். கர்ப்பிணிகள் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் தனியார் மருந்தகங்களில் மாத்திரை, மருந்துகள் வாங்கி உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும். அதற்கான விழிப்புணர்வுகளை செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் மேற்கொள்ளவும் அறிவுறுத்தினார். தொடர்ந்து ரிஷிவந்தியம் ஒன்றியத்திற்குட்பட்ட வேளானந்தல் கிராம ஊராட்சியில் ஊரக வளர்சித்துறையின் சார்பில் ரூ.5.25 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பொது சுகாதார கழிவறை கட்டுமானப் பணி களை ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆட்சியர் அறிவுறுத்தினார். பின்னர் ரிஷிவந்தியம் ஒன்றித்திற்குட்பட்ட சூளாங்குறிச்சி ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் ஊரக ஒருங்கிணைந்த பள்ளிகள் உட்கட்டமைப்பு திட்டத்தின்கீழ் ரூ.17.32 லட்சம் மதிப்பீட்டில் கட்டுமானப் பணிகள் நிறைவுற்ற இரண்டு வகுப்பறைகள் கொண்ட பள்ளி கட்டிடத்தினை ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.