districts

குரூப் 2 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் தகவல்

கள்ளக்குறிச்சி, மார்ச் 23- தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்ட 2022 ஆம் ஆண்டிற்கான  குரூப்-2 மற்றும் 2-ஏ, மற்றும் குரூப்-4 தேர்விற்கு தயாராகும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தினை சேர்ந்த போட்டி தேர்வர்கள் பயனடையும் வகையில், இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் வார நாட்களில் திங்கள் முதல் வெள்ளி வரை நேரடி பயிற்சி வகுப்புகள் காலை 10 மணி முதல் மதியம் 1வரை மணி வரை நடத்தப்படும். இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது குரூப்-2 மற்றும் 2-ஏ தேர்விற்கு விண்ணப்பித்த விண்ணப்ப நகல், புகைப்படம், மற்றும் ஆதார் எண் ஆகிய விவரங்களுடன், 18/63 நேப்பால் தெருவில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரில் தொடர்புக் கொண்டோ அல்லது 6381090764 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் தங்களின் விவரத்தினை தெரிவித்தோ பதிவு செய்து கொள்ளலாம். என ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.