districts

img

தென்பெண்ணை,கெடிலத்தை இணைத்திடுக தமிழ்நாடு விவசாயிகள் சங்க கள்ளக்குறிச்சி மாநாடு வலியுறுத்தல்

கள்ளக்குறிச்சி,ஜூலை 22- தென்பெண்ணை, கெடி லம் ஆறுகளை இணைத்து இதன் தண்ணீரை கள்ளக் கறிச்சி மாவட்ட விவ சாயத்தை மேம்படுத்த பயன்படுத்த வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கள்ளக்குறிச்சி மாவட்ட மாநாடு வலி யுறுத்தியுள்ளது. சங்கத்தின் கள்ளக் கறிச்சி மாவட்ட 24ஆவது மாநாடு வாணா புரம் பகண்டை கூட்டுச் சாலையில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் வி.ரகு ராமன் தலைமையில் மாநாட்டில் ஒன்றிய துணைத் தலைவர் சுரேஷ் குமார் வரவேற்றார். மாநில பொருளாளர் கே. பி.பெருமாள் மாநாட்டை துவக்கி வைத்து உரை யாற்றினார். மாவட்டச் செய லாளர் ஏ.வீ.ஸ்டாலின் மணி வேலை அறிக்கை யும், பொருளாளர் எம்.சி.ஆறுமுகம் வரவு செலவு அறிக்கையும் சமர்ப்பித்தனர். மாநில துணைத் தலைவர் டி.ரவீந்திரன் நிறைவுரை யாற்றினார். விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.சுப்பிரமணியன், சிஐடியு மாவட்டச் செயலாளர் எம்.செந்தில் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். ஒன்றியத் தலைவர் துரை.சாமிநாதன் நன்றி கூறினார்.
புதிய நிர்வாகிகள்
மாவட்டத் தலைவராக டி.ஏழுமலை, மாவட்டச் செயலாளராக ஏ.வீ.ஸ்டாலின்மணி, மாவட்ட பொருளாளராக எம்.சி. ஆறுமுகம் உள்ளிட்ட 31 பேர் கொண்ட மாவட்டக் குழு தேர்வு செய்யப்பட்டது. தென்பெண்ணை ஆற்று டன் கெடிலும் ஆற்றை இணைக்க வேண்டும், ஒன்றிய அரசின் 2021 மின்சார திருத்த சட்டத்தை வாபஸ் பெற வேண்டும், உரம், யூரியா, பூச்சிக் கொல்லி மருந்துகள், விதை கள் ஆகியவற்றை விவ சாயிகளுக்கு மானிய விலை யில் வழங்க வேண்டும், நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம், கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.5ஆயிரம் வழங்கவேண்டும்,. கலையநல்லூர் தனி  யார் சர்க்கரை ஆலையை தமிழக அரசு ஏற்று நடத்த வேண்டும், கரும்பு விவசாயிகளுக்கு ஆலைநிர்வாகம் தர வேண்டிய பாக்கி தொகை ரூ.26 கோடியை பெற்றுத்தர வேண்டும், விவசாயத்திற்கு மின் இணைப்பு கேட்டு காத்திருக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் மின் இணைப்பு வழங்க வேண்டும். கல்வராயன் மலையில் மலைவாழ் மக்கள் விவசாயம் செய்து வரும் 13,000 ஏக்கர் நிலத்தை வனத் துறைக்கு மாற்றி அறி வித்ததை ரத்து செய்ய வேண்டும், மலை வாழ் மக்களுடைய நிலத்திற்கு வன உரிமை சட்டப்படி பட்டா வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.