சிதம்பரம், நவ.26- சிதம்பரம் அருகே வேளக்குடி கிராமத்தைச் சேர்ந்த திருமலை (18) அரசு ஐடிஐயில் படித்து வந்தான். சனிக்கிழமையன்று (நவ.26) அதே ஊரைச் சேர்ந்த நண்பர்கள் விஷ்ணு, பழனி ஆகிய மூவரும் கிராமத்தையொட்டிய பழைய கொள்ளிடம் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது, குளிக்க பயன்படுத்திய சோப்பு ஆற்றின் கரையோரத்தில் விழுந்துள்ளது. இதனை திருமலை எடுக்க முயற்சித்த போது ஆற்றிலிருந்த முதலை இழுத்துச் சென்றுள்ளது. இதனை பார்த்த நண்பர்கள் கூச்சலிட்டதால் அக்கம் பக்கத்தி னர் வந்தனர். பின்னர், தீயணைப்பு, வனம் மற்றும் காவல் துறையிக்கு தகவல் கொடுத்தனர். பிறகு, சம்பவ இடத்திற்கு வந்து தேடுதல் பணியில் ஈடுபட்ட னர். தொடர்ந்து 2 மணி நேரத்திற்கு மேலாக தேடிய நிலையில், புதரில் பதுக்கி வைத்திருந்த திருமலையின் உடலை மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தை அறிந்த சிதம்பரம் உதவி ஆட்சியர் சுவேதாசுமன், சிதம்பரம் காவல் உதவி கண்காணிப்பாளர் ரகுபதி, வட்டாட்சியர் ஹரிதாஸ் உள்ளிட் டோரும் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். அப்போது, இதுபோன்று சம்பவம் இந்த பகுதியில் அதிகம் நடந்து வருவதால் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கைவிடுத்தனர்.