districts

img

குண்டு குழியுமான  சாலையை சீரமைக்க கோரிக்கை

சிதம்பரம், டிச. 21- சிதம்பரத்திலிருந்து மீதிகுடி செல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிதம்பரம் அருகே கொத்தங்குடி ஊராட்சிக்குட்பட்ட கதிர்வேல் நகரிலிருந்து மீதிகுடி வரை 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு தார் சாலை  2 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. தரமற்ற இந்த சாலை 6 மாதத்திற்குள் சேதமானது. இதுவரை அந்த சாலை சீரமைக்கப்படவில்லை. ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக குண்டும் குழியு மாக உள்ள இந்த சாலையை அண்ணாமலை பல்கலைக் கழக ஊழியர்கள் கோவிலம்பூண்டி, மீதி குடி, சரஸ்வதி அம்மாள் நகர், கிருஷ்ணமூர்த்தி நகர், அனுவம்பட்டு, நற்கந்தங்குடி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.  மிகவும் மோசமாக உள்ள இந்த சாலையால் வாகன ஓட்டிகள் சிரமம்மடைந்து வரு கிறார்கள். எனவே, இந்த சாலையை சீரமைத்து கொடுக்க வேண்டும் என்று இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் மல்லிகா கோரிக்கை விடுத்துள்ளார்.