districts

img

விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் ஜெயராமன் காலமானார்

கடலூர்,ஜூன் 7- மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் குறிஞ்சி ப்பாடி ஒன்றியக் குழு உறுப்பினரும்,அன்னதான பேட்டைதெற்கு கிளை செயலாளரும்அகில இந்திய விவசாயதொழிலாளர் சங்க ஒன்றியத்தலைவருமான தோழர் வி.ஜெயராமன் சில காலம் உடல் நலம் சரியில்லா மல் மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலை யில், செவ்வாய்க்கிழமை (ஜூன் 7) காலமானார். அவ ருக்கு வயது 58.  தோழர் ஜெயராமனின் உடல் அன்னதானம்பேட்டையில் பொது மக்களின் அஞ்சலிக் ்காக வைக்கப்பட்டிருந்தது. அவரது உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடலூர் மாவட்டச் செய லாளர் கோ.மாதவன், மாவட்ட செயற்குழு உறுப் பினர்கள் டி.ஆறுமுகம், ஜி.ஆர்.ரவிச்சந்திரன், வட்டச் செயலாளர் தண்டபாணி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் எஸ்.எஸ்.ராஜ்,  சிவகாமி, விவசாய சங்க மாவட்ட துணைச் செயலாளர்சரவணன், ஒன்றியக்குழு உறுப்பின ர்கள் மணிவண்ணன், ராஜேஷ் உள்ளிட்டோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.  மறைந்த தோழர் ஜெயரா மனுக்கு மனைவி, நான்கு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.