சிதம்பரம், டிச.19- அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண்துறையில் பயின்ற துறை மாணவர்கள் 25 ஆண்டு களுக்குப் பிறகு குடும்பத்துடன் சந்தித்து பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்துறையில் 1993-97 ஆண்டுகளில் இளங்கலை வேளாண்மை பயின்ற 120 மாண வர்கள் கல்லூரியை முடித்த பின்பு, பலர் பட்ட மேற்படிப்பு, அரசு, பொதுத்துறை மற்றும் தனி யார் துறைகளில் துறைகளில் பணி யாற்றி வருகின்றனர். இவர்களில் சிலர் வேளாண் விஞ்ஞானிகள், காவல்துறை உயர் அதிகாரிகள், பேராசிரியர்கள், தமிழக அரசின் பனை தொழிலாளர் நல வாரிய உறுப்பினர் என்று பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகிறார்கள். இந்த நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக (அக்ரி யான்ஸ் 97) என்ற பெயரில் பல்கலைக் கழகத்தில் பணியாற்றி வரும் பேராசிரியர்கள் பத்மநாபன், சுனில்குமார், சுதாகர் ஆகியோரது முயற்சியில் முன்னாள் மாண வர்கள் குடும்பத்துடன் கலந்துக் கொள்ள சமூக வலை தளங்கள் மூலம் ஒருங்கி ணைத்தனர். இதனையடுத்து, சிதம்பரம் புறவழிச் சாலையிலுள்ள தனி யார் திருமண மண்டபத்தில் குடும்பத்துடன் ஒன்று கூடி கல்லூரி காலங்களில் நடந்த நிகழ்வுகள், அதன் பிறகு குடும்ப நிகழ்வுகள் குறித்தும் மலரும் நினைவுகளை நினைவுகூர்ந்துகொண்டனர். இந்நிகழ்வில் சிதம்பரம் அண்ணா மலை பல்கலைக்கழக துணை வேந்தர் ராம. கதிரேசன் கலந்து கொண்டு இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, வேளாண்துறை மாணவர்களின் வளர்ச்சிக்கு ரூ.4 லட்சத்தில் அறக்கட்டளை ஒன்றையும் தொடங்கி அதில் கிடைக்கும் வட்டியை கொண்டு விவசாயத் துறை மாணவர்களின் தேர்வு உள்ளிட்ட பலவற்றிற்கும் இலவச மாக வழிகாட்டுவது என்றும் ஏழை மாணவனை தத்தெடுத்து வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் கல்விக்கான செலவு களை ஏற்பது என்றும் உறுதி யேற்றனர். இந்நிகழ்வில் 90 குடும்பங்களை சேர்ந்த வேளாண் துறையில் பயின்றவர்கள் 25 ஆண்டுகள் கடந்து மனைவி, குழந்தைகள் என குடும்பத்துடன் கலந்து கொண்ட நிகழ்வு அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.