districts

img

வீட்டுமனை கவர்ச்சி விளம்பரம்: அப்பாவி மக்களிடம் ரூ.1.67 கோடி மோசடி

சிதம்பரம், ஜூலை 7- சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டை பேரூராட்சியிலும் அதன் சுற்று வட்டாரத்திலும் சபியா நகர், ஏ.கே.எஸ் நகர், கே.கே கார்டன், யூனுஸ் நகர், யூனுஸ் நகர் விரி வாக்கம், மெத்ராஸ் மெகா சிட்டி, ரய்யான் நகர், எஸ்.டி. நகர், அன்பு நகர், மரி யம் நகர், மெகா சிட்டி, ராஜா நகர், குறிஞ்சி நகர், கயல் நகர், ஈ.சி.ஆர் நகர், ஹனிபா நகர் உள்ளிட்ட 20 நகர் பிரிவுகளை உரு வாக்கினர். இந்த மனைகளை விற்பனை செய்ய மாத தவணை முறையை அறி முகம் செய்தனர். ஒவ்வொரு மாதமும் பணம் கட்டும்போது குலுக்கல் முறையில் தங்கம், வெள்ளி நகைகள், மோட்டார் சைக்கிள், டி.வி, பிரிஜ், வாஷ்ங்க் மெஷின் வழங்கப்படும் என்றும் பணம் கட்டி முடித்ததும் கடைசி மாதம் வீட்டுமனை பத்திரப்பதிவு செய்து கொடுக்கப்படும் என்றும் கவர்ச்சி விளம்பரம் செய்துள்ளனர். இதனை நம்பி ஆயி ரக்கணக்கானோர் தவனை முறையில் கடந்த 2012 ஆண்டு முதல் ஒவ்வொருவரும் மாதமும் ரூ. 1500  ரூ. 2500 வரைக்கும் செலுத்தி வந்துள்ளனர். குறைந்த பட்சம் ரூ. 65,000-மும் அதிகப்பட்சம் ரூ. 2,50,000 வரைக்கும் பணம் கட்டி உள்ளனர். 10 ஆண்டுகள் கடந்தும் மனையை பதிவு செய்து கொடுக்கவில்லை. வாங்கிய பணத்தையும் திரும்பிக் தரவில்லை.

இத னால், பணத்தை கட்டிய அப்பாவி மக்கள் பறி தவித்தனர். இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பரங்கிப்பேட்டை வடக்கு ஒன்றிய அலு வலகத்திற்கு வந்த 240 நபர்கள், தாங்கள் கட்டிய ரூ. 1,66,55,680க்கான ரசீது களை ஆதாரமாக கொடுத்த னர். இதனையடுத்து, பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாக்கும் வகையில் ‘மனை அல்லது பணம்’ என்கிற இயக்கத்தை கடந்த மாதம் துவக்கினர். அதன்படி, முதல்கட்டமாக சிதம்பரம் டிஎஸ்பியிடம் புகார் கொடுத்தனர். அடுத் தாக, சிதம்பரம் கோட்டாட்சி யரிடம் மனு கொடுத்து போரட்டம் நடத்தினர். இந்த இயக்கத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் பரங்கிப்பேட்டை வடக்கு ஒன்றியச் செயலாளர் விஜய் தலைமை தாங்கி னார். கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஜி. ரமேஷ்பாபு, மாவட்டக் குழு உறுப்பினர் ராஜா, பரங்கிப்பேட்டை நக ரச் செயலாளர் வேல்முரு கன், ஒன்றியக் குழு உறுப்பி னர்கள் ஜெயசிலன், ஹசம் முகமது, பாண்டி யன், குலஞ்சியப்பன், அருள் தீபன், லெனின் உட்பட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.