கடலூர், டிச. 31- அகில இந்திய சமாதான ஒருமைப் பாட்டுக் கழகத்தின் கடலூர் மாவட்ட முதல் மாநாடு வி.சுகுமாரன், ஜெ.சிவக்குமார் தலை மையில் நடைபெற்றது. அரசு ஊழியர் சங்க நிர்வாகி ஆர்.மனோகரன் வரவேற்றார். அமைப்பின் நோக்கங்களை விளக்கி யும், எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் அமைப்பின் பொதுச் செயலாளர்கள் ஐ.ஆறுமுக நயினார், மருத்துவர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் ஆகியோர் பேசினர். குடியிருப்போர் சங்கத்தின் பொதுச் செயலாளர் மு.மருதவாணன், மருத்துவர் எம்.நாராயணன், என்எப்டிஇ இரா.ஸ்ரீதர், பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் தெரசா கேத்ரின், தமுஎகச மாவட்டச் செயலாளர் கவிஞர் பால்கி, எஸ்.தமிழ்மணி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். எஸ்.கார்த்தி நன்றி கூறினார்.