ஈரோடு, ஜூன் 16- சுதந்திர போராட்ட தியாகி விஸ்வநாத தாஸ் பிறந்த நாள் ஈரோடு சூரம் பட்டி வலசில் கொண்டாடப் பட்டது. விடுதலைப் போராட்ட வீரரும், மேடை நாடக கலை ஞருமான விஸ்வநாத தாஸ் நாடகங்களின் வாயிலாக விடுதலை அரசியலை புகுத் தியவர். இவரின் நாடகங்களுக்கு அரசு விதித்த தடையை மீறி நாடகங்களை நடத்தி சிறைத்தண்டனைப் பெற்றவர். 1940 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி, தனது 54 ஆவது வயதில் நடித்துக் கொண்டிருக்கும்போது மேடையிலேயே உயிர்நீத்தார். அவரது 137 ஆவது பிறந்த நாள் சிஐடியு ஈரோடு மாவட்ட பொது தொழி லாளர் சங்கத்தின் சார்பில் கொண்டாடப்பட் டது. கிளை தலைவர் எஸ்.சிவஞானம் தலைமையில் விஸ்வநாததாஸ் படத்திற்கு மலர் மாலை அணிவித்து அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. மாவட்ட தலை வர் எஸ்.சுப்ரமணியன் சிறப்புரையாற்றி னார். செயலாளர் சி.கோபாலகிருஷ்ணன், பொருளாளர் என்.ஆறுமுகம் உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.