நத்தம், ஜூன் 24- திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம் ஆவி ளிப்பட்டி அரசு உயர்நிலைபள்ளி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கடந்த எட்டு வருடங்களாக தொடர்ச்சி யாக நூறு சதவீதம் தேர்ச்சி பெற்று வருகின்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளர் மூக்கராசு மகன் நாகேந்திரன் 463 மதிப்பெண்கள் எடுத்து பள்ளியில் முதன்மை பெற்றுள்ளார். யுவஸ்ரீ இராண்டாமிடமும் மகா லெட்சுமி மூன்றாமிடமும் பெற்றுள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் வெள்ளைக் கண்ணன், கிளை செயலாளர் மூக்கராசு ஆகியோர் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இனிப்புகள் வழங்கி ஒன்றியக்குழு சார்பாக வாழ்த்துகளை தெரிவித்த னர். இப்பகுதி பொது மக்களும் ஆசிரியர்கள் மற்றும் மாண வர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.