கோவை, ஏப்.3- உலக ஆட்டிசம் தினத்தை முன்னிட்டு கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்து வமனையில் ஆட்டிசம் குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. உலகில் 44 குழந்தைகளில் ஒருவருக்கு ஆட்டிசம் பாதிப்பு இருப்பதாகவும், ஆட்டி சம் பாதிப்புள்ள நான்கு குழந்தைகளில் 3 பேர் ஆண் குழந்தைகள் என்பதும் சமீ பத்திய ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், ஆட்டிசம் என்பது நோயல்ல, அது குழந்தையின் உடலில் உருவாகும் ஒரு நிலை மட்டுமே என்பதை பெற்றோர் கள் புரிந்து கொள்ளும் வகையிலும் ஆண்டு தோறும் ஏப்.2 ஆம் தேதி உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இவ்வாண்டு கருவாக, பணி யிடங்களில் ஆட்டிசம் குழந்தைகள் என்ற தலைப்பு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதை யொட்டி கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள மாவட்ட தொடக்க நிலை இடையீட்டு சேவைகள் மையத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை பெற்றது. இதில், ஆட்டிசம் நிலைப்பாடு உள்ள குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் கலந்து கொண்டனர். மருத்துவமனை முதல்வர் நிர்மலா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி யில், மூன்று வயதிற்குள்ளாக குழந்தைகளி டம் காணப்படும் செயல்பாடுகளை கண்ட றிந்து உரிய பரிசோதனைகள் மூலம் ஆட்டி சம் பாதிப்பு உள்ளதா என்பதை கண்ட றிந்து, துவக்க நிலையிலேயே உரிய பயிற்சி களை வழங்கினால், வழக்கமான வாழ்க் கைக்கு குழந்தைகளை பயிற்றுவிக்க முடி யும் என எடுத்து கூறப்பட்டது. மேலும், பெற்றோர்களின் அனுபவங்கள் மற்றும் பயிற்சி பெற்று வரும் ஆட்டிசம் குழந்தை களின் செயல்திறனை வெளிப்படுத்தும் நிகழ்ச்சிகள் ஆகியவை நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து குழந்தைகள் அனைவ ருக்கும் பரிசுகள் வழங்கி பாராட்டப்பட் டது. இதில், தெரபிஸ்டுகள் எனப்படும் பயிற்றுநர்கள், மருத்துவர்கள், செவிலி யர்கள், அலுவலர்கள் உள்ளிட்ட திரளா னோர் கலந்து கொண்டனர்.