districts

img

நலத் திட்டப்பணிகள்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருப்பூர், செப்.18- திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டத் திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் உங்களை  தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் நடை பெற்று வரும் நலத் திட்டப்பணிகளை மாவட்ட  ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் புதனன்று ஆய்வு  மேற்கொண்டார். பல்லடம் வட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் உங்களை தேடி உங்கள் ஊரில்  திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் நலதிட்டப்  பணிகளை மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்து ராஜ் கள ஆய்வு மேற்கொண்டார். இதைதொ டர்ந்து அரசு அலுவலகங்களில் கள ஆய்வு  மேற்கொண்டதன் அடிப்படையில் பெறப் பட்ட கருத்துக்கள் மீது ஆய்வு கூட்டம் நடை பெற்றது. இவ்ஆய்வுக் கூட்டத்தில் அரசின் திட்டங்கள் குறித்தும், பொதுமக்களிடம் வர பெற்ற கோரிக்கைகள் மற்றும் தேவைகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டு உடனடி நட வடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமந் தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட  ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார் கள். இதைதொடர்ந்து, பல்லடம் வட்டாட் சியர் அலுவலகத்தில் பொதுமக்களை நேரில்  சந்தித்து குறைகளை கேட்டறிந்து, கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண் டார். இந்த ஆய்வுகளில், மாவட்ட வருவாய் அலுவலர் க.கார்த்திகேயன், மாவட்ட ஊரக  வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் கோ. மலர்விழி, தனி துணை ஆட்சியர் (சமூகப் பாது கப்புத்திட்டம்) குமாரராஜா,  நியமன அலுவ லர் (உணவுப்பாதுகாப்புத்துறை) விஜயலலி தாம்பிகை, பொதுமேலாளர் (ஆவின்) சுஜதா, பொதுமேலாளர் (தாட்கோ) ரஞ்சித்கு மார், மாவட்ட ஆதிதிராவிடர் நலஅலுவலர்  புஷ்பாதேவி, மாவட்ட சமூக நல அலுவலர்  ரஞ்சிதா தேவி, பல்லடம் நகராட்சி ஆணையர்  பானுமதி, நகராட்சி பொறியாளர் சுகுமார், பல் லடம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கனக ராஜ், பாலசுப்பரமணியம் மற்றும் அனைத் துத்துறை மாவட்ட அளவிலான அலுவலர் கள் கலந்து கொண்டனர்.