districts

விபத்தில் சிறுவன் பலி

கோவை, மே 28- கோவை வீரபாண்டி பிரஸ் காலனியை சேர்ந்த வர் அமல் சிமோன் தனியார் நிறுவன ஊழியர். இவரது தந்தை செல்வராஜ் (65). இவர் தனது பேரக் குழந்தை களான நித்தின் ஆபிரஹாம் (12),  கல்வின் கார்சன் (9), யுவன்  கிரிசின் (4) ஆகிய மூன்று பேருடன் கோடை விடுமுறையை கொண்டாட கேரளா மாநிலத்தில் உள்ள  மலப்புழா அணைக்கு வியா ழனன்று சென்றுள்ளனர்.  பின்னர், மாலை மீண்டும் கோவைக்கு காரில் வந்துள் ளனர். சேலம் – கொச்சின் சாலை மதுக்கரை பாலத் துறை சந்திப்பு அருகே வந்த போது பின்னால் அதிவேக மாக வந்த ஈச்சர் வாகனம் செல்வராஜ் வந்த கார் மீது பயங்கரமாக மோதியது. இதில், கட்டுப்பாட்டை  இழந்த கார் எதிரே கேரளா  நோக்கிச் சென்ற டிப்பர் லாரி  மீது மோதி நின்றது. இதில் காரில் இருந்த நான்கு பேரும் படுகாயமடைந்தனர். இந்த விபத்தில் அமல் சிமோன் மகன் யுவான் கிரிசின் உயிரிழந்தார். மற்ற  மூன்று பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரு கிறது. இந்த விபத்து குறித்து  போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.