districts

img

தொழிற்சங்கங்களுடன் பேசி நியாயமான மீட்டர் கட்டணத்தை நிர்ணயித்திடுக

கோவை, மே 28– தொழிற்சங்கங்களுடன் கலந்து பேசி உடனடியாக ஆட்டோ மீட்டர் கட்ட ணத்தை தமிழக அரசு நிர்ணயிக்க வேண்டும் என சிஐடியு ஆட்டோ தொழி லாளர் சங்க கோவை மாவட்ட மாநாடு  வலியுறுத்தியுள்ளது. கோவை மாவட்ட ஆட்டோ தொழி லாளர் சங்கத்தின் (சிஐடியு) 14 ஆவது  மாவட்ட மாநாடு சனியன்று காந்தி புரம் 9 ஆவது வீதியிலுள்ள கேரள சமா ஜம்  பி.கே.சுகுமார் நினைவரங்கத்தில்  நடைபெற்றது. இம்மாநாட்டிற்கு சங் கத்தின் மாவட்ட தலைவர் இரா.செல் வம் தலைமை தாங்கினார். மாணிக்க வாசகம் வரவேற்றார். இதைத் தொடர்ந்து, ஆட்டோ தொழிலாளர் களின் வாழ்வுரிமைக்கான போராட்டத் தில் முன்னின்று வழிநடத்திய மறைந்த தோழர் பி.கே.சுகுமாறன் படத்தை  திறந்து வைத்து சிஐடியு மாவட்ட தலை வர் சி.பத்மநாபன் புகழஞ்சலி செலுத்தி னார். சிஐடியு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி வாழ்த்தி பேசினார். சிஐடியு மாவட்ட பொருளாளர் ஆர். வேலுசாமி மாநாட்டை துவக்கி வைத்து  உரையாற்றினார். ஆட்டோ தொழிலா ளர் சங்கத்தின் துணை பொதுச்செய லாளர் எம்.கே.முத்துக்குமார், பொரு ளாளர் எம்.மைக்கேல் சாமி ஆகி யோர் அறிக்கையை முன்வைத்து பேசி னர்

தீர்மானங்கள்
இதில், பெட்ரோல், டீசல் விலை 100  ரூபாயை கடந்துவிட்டது. வாகன உதிரி  பாகங்கள் விலை உயர்வு. ஆர்.டி.ஓ. கட்டணங்கள் மற்றும் இன்சூரன்ஸ் கட்டணங்கள் அனைத்தும் கண்மூடி தனமாக உயர்ந்துள்ளது. ஆகவே,  தொழிற்சங்கங்களுடன் கலந்துபேசி உடனடியாக ஆட்டோ மீட்டர் கட்ட ணத்தை மினிமம் 1.5 கி.மீட்டருக்கு ரூ.50ம், அடுத்த ஒவ்வொரு கிலோ மீட்ட ருக்கு ரூ. 25ம் என அறிவித்திட வேண் டும். மாநில அரசு உடனடியாக பைக் டாக்சியை தடை செய்ய வேண்டும். தமிழக அரசு ஆட்டோக்களுக்கான ஆன்லைன் ஆப் (App) துவங்கி பொதுமக்களுக்கு சேவையும், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு வாழ்வாதார மும் வழங்கிட வேண்டும். நலவாரி யத்தில் பதிவு செய்த ஆட்டோ ஓட்டுநர் களுக்கு நகரப்புற வாழ்விட மேம் பாட்டு வாரியத்தின் மூலம் தமிழக அரசு  ஆட்டோ ஓட்டுநர்களுக்கு குடியிருப்பு களை வழங்கிட வேண்டும். மேலும், கோவை மாநகரில் கட்டி முடிக்கப்பட்ட  மேம்பாலங்களை உடனடியாக திறப்பதுடன், உக்கடம் மேம்பால பணி களை விரைந்து முடித்திட வேண்டும்  என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.

புதிய நிர்வாகிகள் தேர்வு
இம்மாநாட்டில் சங்கத்தின் புதிய  தலைவராக இரா.செல்வம், பொதுச் செயலாளராக எம்.கே.முத்துக்குமார், பொருளாளராக எம்.மைக்கேல் சாமி  உள்ளிட்ட 37 பேர் கொண்ட நிர்வாகக் குழு மாநாட்டில் தேர்வு செய்யப்பட் டது. மாநாட்டை நிறைவு செய்து  ஆட்டோ தொழிலாளர் சம்மேளனத் தின் பொதுச்செயலாளர் எம்.சிவாஜி உரையாற்றினார். மாநாட்டில் மாவட் டம் முழுவதும் இருந்து 200க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் பிரதி நிதிகளாக பங்கேற்றனர். முடிவில் பி.சி.முருகன் நன்றி கூறினார்.