இளம்பிள்ளை, மே 14- இடங்கணசாலை பேரூராட்சி தூய்மை பணியா ளர்களுக்கு அதிமுக சார்பில் புதனன்று நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே உள்ள இடங்கணசாலை பேரூராட்சி பகுதிகளில் தூய்மைப்பணியில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்களை ஊக்கப்படுத்தும் விதமாக இடங் கணசாலை அதிமுக கட்சியின் சார்பில் 5 கிலோ அரிசி, பருப்பு, சோப்பு உள்ளிட்ட 500 ரூபாய் மதிப்புள்ள அத்தியாவசிய பொருட்கள் வழங்கப் பட்டது. இடங்கணசாலை பேரூராட்சி முன்னாள் தலைவர் சிவலிங்கம் தலைமையில், பேரூராட்சி செயல் அலுவலர் பாலகிருஷ்ணன் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்வில் பேரூர் கழக செயலாளர் அண்ணாமலை, துணைத் தலைவர் முத்து, கூட்டு றவு பண்டகசாலை தலைவர் ஏழுமலை உட்பட பலர் கலந்து கொண்டனர்.