அவிநாசி, டிச. 6- அவிநாசி அருகே பள்ளிவாசலுக்கு வெள்ளியன்று போலீஸ் பாதுகாப்பு அளிக் கப்பட்டது. கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு உத்த ரபிரதேச மாநிலம், அயோத்திலிருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இவ்வழக்கில் அண்மையில் தீர்ப்பளிக்கப்பட்டது. இது தீர்ப்பு தானே தவிர, நீதியல்ல. எனவே, மசூதியை இடித்த குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும். நாடு விடு தலை பெறுவதற்கு முந்தைய வழிபாட்டுத் தலங்களை இடையூறு செய்வதற்கு அனுமதிக்கக் கூடாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட முற்போக்கு அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், அவிநாசி அருகே மங்க லம் சாலையில் உள்ள இசுலாமியர்களின் பள்ளிவாசல், அத்துடன் புதிய கட்டிட வேலையும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வெள்ளியன்று முஸ்லிம் மதத்தினர் மதிய நேரத்தில் அவிநாசி, கருவ லூர், நம்பியாபாளையம் உள்ளிட்ட பகுதி களிலிருந்து தொழுகைக்கு வந்து செல்வது வழக்கம். இதையடுத்து டிசம்பர் ஆறாம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி அவிநாசி போலீசார் பள்ளிவாசலுக்கு பாது காப்பு அளித்தனர்.