districts

img

தில்லையாடியில் தொடர் மணல் திருட்டு

தரங்கம்பாடி, மே 4-நாகை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் தில்லை யாடியில் மணல் திருட்டை தடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பாக வருவாய்த்துறைக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கணேசன் அளித்துள்ள கோரிக்கை மனுவில், தில்லையாடி கூத்தாடித்திடல் அருகே மாரியம்மன் கோவில் பின்புறம் பகுதியில் காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஒருவர் மணல் திருட்டில் ஈடுபட்டு வருவதாகவும், இரவு நேரங்களில் பல்வேறு பகுதிகளுக்கு டிராக்டர் டிப்பர்களில் கடத்துவதாகவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பலமுறை விஏஓ, வருவாய் ஆய்வாளரிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை. எனவே உடனடியாக நடவடிக்கை இல்லாத நிலையில் போராட்டம் நடத்தப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.