மதுரை, செப்.5- நிலக்கோட்டை, சித்தர்கள் நத்தம் வைகை தடுப்பணையில் நடைபெறும் மணல் கடத்தல் குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க, நிலக்கோட்டை கோட்டாட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ராமராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த முத்துகிருஷ் ணன், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தி ருந்தார். அதில்,” திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே ராமராஜபுரம், சித்தர்கள்நத்தம் உள் ளிட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களைச் சேர்ந்தவர்கள் விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர். வைகை ஆற்றுநீரை விவசாயத்திற்கும், குடி நீருக்கும் நம்பி உள்ளனர். சித்தர்கள்நத்தம் பகுதியில் தடுப்பணை கட்டப்பட்டு ள்ளது. ஆற்றில் தண்ணீர் வேகமாக வரும்போது அடித்து வரப்பட்ட மணல் அதிகளவு சித்தர்கள்நத்தம் தடுப்பணை யில் தேங்கி உள்ளது. தற்போது ஆற்றில் நீர் வரத்து இல்லை. இதைப் பயன்படுத்தி சிலர், சித்தர்கள்நத்தம் கிராமம் அருகே தடுப்பணையில் தேங்கியமணலை இரவோடு இரவாக ஜேசிபி இயந்திரத்தைப் பயன்படுத்தி, லாரிகளில் சட்ட விரோதமாக ஆற்று மணலை திருடிச் செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் அதல பாதாளத்திற்கு சென்றுவிட்டது விவசாய நிலங்களும் பாதிக்கப்படும் நிலை உள் ளது.நிலக்கோட்டை அருகே உள்ளசித்தர்கள்நத்தம் பகுதி வைகை ஆற்று தடுப்பணை யில் சட்டவிரோதமாக மணல் அள்ளி கடத்துவதைத்தடுக்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” எனக் கூறியிருந்தார். இந்த மனுவை செவ்வாயன்று விசாரித்த நீதிபதிகள் சிவஞானம், தாரணி அமர்வு, நிலக்கோட்டை சித்தர்கள்நத்தம் பகுதி வைகை ஆற்றுத் தடுப்பணையில் சட்ட விரோத மணல் திருட்டு தொடர்பாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க நிலக்கோட்டை கோட்டாட்சியருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.