districts

img

அரசு பள்ளியில் குழந்தைகளை சேர்க்க பெற்றோர்கள் ஆர்வம்

திருவண்ணாமலை, ஜூன் 3-திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த இராமசாணி குப்பம் ஊராட்சி ஒன்றிய  தொடக்கப்பள்ளியில் மாணவர்களின் சேர்க்கையின் ஆர்வத்தை உருவாக் கும் வகையில், பள்ளிகள் திறக்கப்பட்ட  முதல் நாளான திங்களன்று(ஜூன்3) பள்ளியில் சேர்ந்துள்ள புதிய மாணவர்களுக்கு மாலை அணிவித்து, இனிப்புகள் வழங்கி  மேள,தாளங்களுடன்  ஊர் பொதுமக்கள் மற்றும் ஆசிரியர்கள்  ஊர்வலமாக மாணவர்களை பள்ளிக்கு  அழைத்து  வந்தனர்.  இந்த நிகழ்ச்சியில், மாவட்டக் கல்வி அலுவலர் சம்பத், பள்ளி தலைமை ஆசிரியை தாமரைச்செல்வி,  மற்றும் ஊர் பொதுமக்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இந்த பள்ளியில் இந்த கல்வியாண்டில் எல்கேஜி, யுகேஜி வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை ஆங்கில வழிக் கல்வி நடைபெற்று வருகிறது, மாணவர்களுக்கு அபாக் கஸ் கணித பயிற்சி, யோகா, கராத்தே பயிற்சி, உடற் கல்வி போன்றவை சிறப்பாக கற்பிக்கப்பட்டு வருகிறது.திருவண்ணாமலை மாவட்டம் மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள இராமசாணிக் குப்பம் கிராமத்தில்  ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளியில் இந்த ஆண்டு புதியதாக  85 மாணவ, மாணவியர் சேர்ந்துள்ளனர்.