districts

img

கோவை : நொய்யல் மற்றும் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

கோவை, ஆக. 7 -   கனமழை காரணமாக கோவை நொய்யல் ஆற்றில் நான் காவது நாளாக தண்ணீர் பெருக்கெடுத்து வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவ லாக மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்ப குதிகளில் கனமழை பெய்து வருவதால் நொய்யல் மற்றும் பவானி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இத னால் ஆத்துப்பாலம், போத்தனூர், வெள்ளலூர் உள்ளிட்ட பகுதிகள் வழியாக செல்லும் நொய்யல் ஆற்றில் நான்கா வது நாளாக நீர் ஆர்ப்பரித்து செல்கிறது. மேலும், வெள்ள லூர் - சிங்காநல்லூர் மற்றும் ஒண்டிபுதூர் - பட்டணம்புதூர் சாலைகளில் தரைப்பாலத்தை ஒட்டி வெள்ள நீர் பெருக் கெடுத்து ஒடி வருகிறது. இம்மழை நீடித்தால் இத்தரைப் பாலங்கள் வெள்ளத்தில் மூழ்க வாய்ப்புள்ளது.  இந்நிலையில், வெள்ளலூர் - சிங்காநல்லூர் சாலையில் உள்ள தரைப்பாலத்தின் மேல் உள்ள சாலை சேதமடைந்து காணப்படுவதால் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால், வாகன ஒட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்ற னர்.