districts

img

பயிர் காப்பீடு திட்டத்தின் மூலம் ரூ.5,542 கோடி வழங்கல்

அமைச்சர் தகவல் சேலம், பிப்.26- பயிர் காப்பீடு திட்டத்தின் மூலம்  ரூ.5,542 கோடி நிவாரணத் தொகை  வழங்கப்பட்டுள்ளதென, வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச் சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சேலம், கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 9 மாவட்டங் களை உள்ளடக்கிய மண்டல வாரி யான 2025 - 26 வேளாண்மை தனி நிதிநிலை அறிக்கை தொடர்பான கருத்துக் கேட்புக்கூட்டம், சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் புத னன்று நடைபெற்றது. இக்கூட்டத் திற்கு, வேளாண்மை மற்றும் உழ வர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர். கே.பன்னீர்செல்வம் தலைமை வகித் தார். வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு. முத்துசாமி, சுற்றுலாத்துறை அமைச் சர் ரா.ராஜேந்திரன், மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். இதன் பின் அமைச்சர் பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேசுகையில், கடந்த 4 வேளாண் நிதிநிலை அறிக் கைகளும் விவசாயிகளின் கோரிக் கைகளைக் கேட்டறிந்து அதற்கேற் றவாறு தாக்கல் செய்யப்பட்டன. விவசாயிகள் தாங்கள் விளைவிக் கும் பொருட்களை மதிப்புக்கூட்டப் பட்ட பொருட்களாக மாற்றி இலாப கரமான முறையில் சந்தைப்படுத்து வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. இதற்கென விவ சாயிகளுக்கு பயிற்சிகள், வேளாண் இயந்திரமயமாக்குதல் உள் ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல் படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த மூன்றரை ஆண்டுகளில் பயிர் காப் பீடு திட்டத்தின் மூலம் ரூ.5,542 கோடி  நிவாரண உதவித்தொகையாக எவ் வித நிலுவையும் இல்லாமல் வழங் கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு ஒரு லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்படும் என அறிவித்து, எவ் வித காலதாமதமும் இல்லாமல் மின் இணைப்புகள் விவசாயிக ளுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட சில பகுதிகளில் மட் டுமே விளையும் சிறப்பு வாய்ந்த 30  பொருட்களுக்கு புவிசார் குறியீடு கள் வழங்கப்படுள்ளது, என்றார். இக்கூட்டத்தில், வேளாண்மை உற்பத்தி ஆணையர் வி.தட்சிணா மூர்த்தி, சேலம் மாவட்ட ஆட்சியர் ரா.பிருந்தாதேவி, வேளாண் விற் பனை ஆணையர் டி.ஆபிரகாம், மாநிலங்களவை உறுப்பினர் அந்தி யூர். ப.செல்வராசு, மக்களவை உறுப் பினர்கள் டி.எம்.செல்வகணபதி (சேலம்), தே.மலையரசன் (கள்ளக் குறிச்சி), அ.மணி (தருமபுரி), கே.இ.பிரகாஷ் (ஈரோடு), கே.சுப்ப ராயன் (திருப்பூர்), சட்டமன்ற உறுப் பினர்கள், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் வி.கீதாலட்சுமி மற்றும் 9 மாவட்ட விவசாயிகள், விவசாய சங்கங்க ளின் பிரதிநிதிகள், வேளாண் விஞ் ஞானிகள், வேளாண்மைத்துறை அலுவலர்கள் கலந்து கொண்ட னர்.