districts

img

பழங்குடி மக்கள் சங்கம்: நெமிலியில் அமைப்பு கூட்டம்

அரக்கோணம்,மார்ச் 28- நெமிலி-அரக்கோணம் தாலுகாவில் வாழும் இருளர் பழங்குடி மக்களை ஒருங்கிணைத்து அமைப்பு கூட்டம் தமிழ் நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் வேலூர் மாவட்ட துணைச் செயலாள வி.கே.தணிகாசலம் தலைமையில் நெமிலியில் நடைபெற்றது. சங்கத்தின் மாநில துணைத் தலைவர் தோழர் ஏ.வி.சண்முகம், தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தின் ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளர் எல்.சி.மணி, அரக்கோணம் நகரச் செய லாளர் ஏ.பி.எம் சீனிவாசன், விசைத்தறி சம்மேளன மாநில துணைச் செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். இரண்டு தாலுகாவி லிருந்தும் ஐம்பதுக்கும் மேற்பட்ட இருளர் பழங்குடி மக்கள் கலந்து கொண்டனர். இதில் ஜெயமாலினி உள்ளிட்ட ஐந்து ஒருங்கி ணைப்பாளர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.