சென்னை,ஜன. 7- இந்தியாவில் இளம் வங்கியராக வங்கிப் பணி யில் சேர விரும்பும் இளைஞர் களைத் தயார்படுத்தும் நோக்கத்துடன் மணிபால் அகாடமி ஆப் பி.எப்.எஸ்.ஐ ஆக்சிஸ் வங்கியுடன் இணைந்து ஆக்சிஸ் இளம் வங்கியர் திட்டத்தில் இந்தாண்டுக்கான மாணவர் சேர்க்கையை தொடங்கி யுள்ளது. 2012 ல் தொடங்கிய இந்த திட்டத்தில் பயிற்சி பெற்ற 9ஆயிரத்திற்கும் மேற்பட் டோர் ஆக்சிஸ் வங்கி யில் வேலைக்கு அமர்த்தப் பட்டுள்ளனர். மணிப்பால் அகாடமியின் அனுபவமிக்க ஆசிரியர்களால் இந்த பயிற்சித் திட்டம் செயல்படுத் தப்படுகிறது. வளாக பயிற்சி, நிபுணர் களின் விரிவுரைகள், மாதிரி கிளையின் செயல்பாடுகள், கள ஆய்வுகள் உள்ளிட்ட வற்றை இந்த பயிற்சித் திட்டம் கொண்டுள்ளது. பயிற்சியை தொடர்ந்து ஆக்சிஸ் வங்கியில் 3 மாத இன்டர்ஷிப் வழங்கப்படு கிறது. மேலும் தகவல், தகுதி, மற்றும் சேர்க்கை விபரங்க ளுக்கு AXIS BANK YOUNG BANKERS PROGRAM இணையதளத்தை பார்க்க வும்.