செங்கம், மே 15- செங்கம் அருகே ஆற்றில் மூழ்கி சிறுமி, சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தனர். செங்கம் அருகே உள்ள பரமனந்தல் தீபம் நகரைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவருடைய மகள் கீர்த்தனா (11) மற்றும் உறவினர் புதுப்பாளையத்தை சேர்ந்த சுரேஷ் மகன் விஷ்ணு (11) இவர்கள் இருவரும் வீட்டின் அருகே உள்ள செய்யாற்றில் குளிப்பதற்காக சென்றனர். இந்நிலையில் ஆற்றில் இறங்கி குளிக்கும்போது ஆழம் அதிகம் உள்ள பகுதியில் சிக்கிக்கொண்டனர். இதில் தண்ணீரில் மூழ்கி கீர்த்தனாவும், விஷ்ணுவும் பரிதாபமாக இறந்தனர். இறந்த சிறுவர்களின் உடலையும் பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து செங்கம் காவல்துறையினர வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மேற்கொண்டு வருகின்றனர்.