விழுப்புரம், ஜூன் 27- மாணவர்கள், பொதுமக்களுக்கு இடை யூறாக இருக்கும் மதுபானக் கடையை அகற்ற வேண்டும் என வாலிபர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் திண்டிவனம் பகுதி மாநாடு தலைவர் ஐ.முருகன் தலைமையில் திண்டிவனத்தில் ஞாயிறன்று (ஜூன் 26) நடைபெற்றது. துணை செயலாளர் ஏ.ம.சதீஷ்குமார் வரவேற்றார். மாவட்டத் தலைவர் எஸ்.பிரகாஷ் மாநாட்டை தொடங்கி வைத்தார். பகுதிச் செயலாளர் எஸ்.பார்த்திபன் வேலை அறிக்கையை சமர்பித்தார். மாவட்டச் செயலாளர் சே.அறிவழகன் மாநாட்டை நிறைவு செய்து பேசினார்.
தீர்மானங்கள்
திண்டிவனம் மேம்பாலத்தை கடக்க நகரும் மின் படிக்கட்டு அமைக்க வேண்டும், ரயில் நிலையத்தில் அனைத்து விரைவு ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும், பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட திண்டிவனம் - நகரி, திண்டிவனம் - திருவண்ணாமலை புதிய ரயில் பாதை திட்டத்தை விரைந்து அமைக்க வேண்டும், விழுப்புரம் - செங்கல்பட்டு இடையே புதிய மின்சார ரயில் திட்டத்தை துவக்க வேண்டும், திண்டிவனம் நேஷனல் பள்ளி அருகே மாணவர்கள், பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் மதுபானக் கடையை அகற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
புதிய நிர்வாகிகள்
தலைவராக எஸ்.பார்த்திபன், செய லாளராக ஏ.ம.சதீஷ்குமார், பொருளாளராக ர.பாரதிதாசன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.