சென்னை,ஏப். 27 ஜிண்டால் ஸ்டெயின்லெஸ் லிமிடெட் (ஜேஎஸ்எல்) மற்றும் ஜிண்டால் ஸ்டெயின்லெஸ் (``ஹிசார்) லிமிடெட் ஜேஎஸ்எச்எல்) ஆகிய நிறுவனங்களை ஒன்றாக இணைக்க நிறுவன சட்டப்படி நடைமுறைகள் தொடங்கியுள்ளன. இரண்டு நிறுவனங்களை இணைப்பதற்கான ஏற்பாடுகளை அங்கீகரிப்பதற்காக நிறுவனங்கள் தங்களது பங்குதாரர்கள் மற்றும் கடன் வழங்குவோரின் கூட்டங்களை நடத்தின. அதில் பெரும்பான்மையினரால் இணைப்புத் திட்டம் அங்கீகரிக்கப்பட்டது என்று ஜேஎஸ்எல் நிர்வாக இயக்குநர் அபியுதாய் ஜிண்டால் தெரிவித்துள்ளார். வரும் 2023ஆம் நிதியாண்டுக்குள் இந்த பணிகள் அனைத்தும் முடிந்து விடும் என்றும் அவர் கூறினார்.