சென்னை,ஏப். 10- மத்திய அரசின் கலாசாரத்துறையின் கீழ் சென்னை திருவான்மியூரில் செயல்பட்டு வரும் கலாஷேத்ரா நாட்டிய கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்படுவதாக புகார் எழுந்தது. கலாஷேத்ராவில் எழுந்துள்ள பாலியல் புகார் தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி, டி.ஜி.பி. மற்றும் டாக்டர் அடங்கிய விசாரணை குழுவை கலாஷேத்ரா அறக்கட்டளை அமைத்துள்ளது. இந்நிலையில், பாலியல் புகார் தொடர்பாக கலாஷேத்ரா கல்லூரியில், செவ்வாயன்று மனித உரிமைகள் ஆணையத்தின் குழு விசாரணை நடத்த உள்ளது. ஏற்கனவே மகளிர் ஆணையம் விசாரித்து வரும் நிலையில் மனித உரிமைகள் ஆணையமும் விசாரணையை தொடங்குகிறது. ஆறு வாரங்களில் அறிக்கை அளிக்க உத்தரவிடப் பட்டுள்ளது.