districts

img

கொள்ளிடம் பாலத்தில் தார் சாலை அமைக்கக்கோரி பொதுமக்கள் மறியல்

சிதம்பரம், ஜூன் 27- கொள்ளிடம் பாலத்தில் தார் சாலை அமைக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிதம்பரம் அருகே கொள்ளிடம் பாலத்தில் வல்லம்படுகை முதல் புளியங்குடி வரை உள்ள தீத்துக்குடி, கருப்பூர், நளன்புத்தூர், ஒற்றர்பாளையம், முள்ளங்குடி, கீழபருத்திகுடி, மேலபருத்திக்குடி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராமங்க ளுக்குச் செல்லும் கொள்ளிடம் இடது கரை சாலை சிதிலமடைந்து போக்கு வரத்திற்கு லாய்கற்றதாக உள்ளது. இதனால் அடிக்கடி சாலை விபத்து ஏற்படுவதோடு, பலர் படுகாய மடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் பல முறை மனு அளித்தும், போரட்டம் நடத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் அப்பகுதி மக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன் தலைமையில் கொள்ளிடம் பாலம் அருகே சிதம்பரம் - திருச்சி  தேசிய நெடுஞ்சாலையில் திங்களன்று (ஜூன் 27) சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சிதம்பரம் கோட்டாட்சியர் ரவி, டிஎஸ்பி ரமேஷ் ராஜ். பொதுப் பணித்துறையினர், வருவாய் துறை யினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இந்த சாலை அமைக்க ரூ 19 கோடி தேவைப்படுகிறது என்றும், இதற்கான திட்ட மதிப்பீடு மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையின் பேரில் கனிமவள திட்ட நிதியின் மூலம் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து மறியல் போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இதில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் உதயகுமார், ராமச்சந்திரன், குமராட்சி ஒன்றியச் செயலாளர் மனோகரன், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் மாசிலாமணி, ஜெயக்குமார் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.